கடந்த 1997-ம் ஆண்டு முதல் இந்தி சினிமாவில் திரைக்கதை ஆசியராக தனது சினிமா பயணத்தை தொடங்கினார் அனுராக் காஷ்யப் ( Anurag Kashyap) . தொடர்ந்து இந்தி சினிமாவில் திரைக்கதை ஆசிரியராக இருந்த அனுராக் காஷ்யப் கடந்த 2003-ம் ஆண்டு இந்தி சினிமாவில் வெளியான பான்ஞ் என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனார்.
சக்திமான் படத்திற்காக 2 வருசம் காத்திருந்த பேசில் ஜோசப்:
இந்த நிலையில் சமீபத்தில் அனுராக் காஷ்யப் அளித்த பேட்டி ஒன்று ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. அதில், மலையாள சினிமாவில் இயக்குநரும் நடிகருமான பேசில் ஜோசப் சக்திமான் படத்தை இயக்குவதற்காக இரண்டு வருடங்கள் காத்திருந்ததாகவும் பிறகுதான் மின்னல் முரளி படத்தை இயக்கியதாகவும் அவர் கூறியதாக தெரிவித்தார். மேலும் இந்த சினிமா துறையில் தாக்குபிடிப்பது மிகவும் கடினமான ஒன்றாக உள்ளது என்று பேசில் கூறியதாகவும் அதை தான் இந்தி சினிமாவில் உணர்ந்ததாகவும் அனுராக் காஷ்யப் தெரிவித்துள்ளார். ... விபத்தில் சிக்கிய பிரபல மலையாள நடிகர் ஜோஜூ ஜார்ஜ் - என்ன நடந்தது?இணையத்தில் கவனம் பெறும் அனுராக் காஷ்யப் வீடியோ:

