உலக அளவில் மிக முக்கிய உலோகமாக தங்கம் உள்ளது. பெரும்பாலான மக்கள் தங்கத்தில் அதிக முதலீடு செய்கிறனர்.
இதன் காரணமாக எப்போதுமே அதிக விலைமதிப்பு கொண்ட ஒரு உலோகமாக தங்கம் உள்ளது. அதுமட்டுமன்றி, தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டும் வருகிறது.

சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சவரன் தங்கம் ரூ.40,000-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால், தற்போது மூன்று மடங்கு விலை உயர்வை சந்தித்து ஒரு சவரன் ரூ.1,12,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், தற்போதைய நிலவரப்படி கையில் ரூ.1 லட்சம் இருந்தால் எவ்வளவு தங்கம் வாங்கலாம் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

தற்போதைய நிலவரப்படி சென்னையில் ஒரு கிராம் 22 காரட் தங்கம் ரூ.14,060-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது தங்கத்திற்கான விலை மட்டும் தான் கடைகளுக்கு சென்று தங்க நாணயமாகவோ அல்லது ஆபரணமாகவோ வாங்க நினைத்தால் விலையில் மேலும் மாற்றங்கள் ஏற்படும்.

அதாவது, கடைக்கு சென்று தங்கத்தை வாங்கும்போது அதற்கு செய்கூலி, சேதாரம், ஜிஎஸ்டி ஆகியவை விதிக்கப்படும். அதற்காக குறிப்பிட்ட தொகையை நீங்கள் செலுத்த வேண்டியது ஏற்படும். எனவே தங்கம் ஒரு கிராம் ரூ.14,060-க்கு விற்பனையாகிறது என்றால் அதனுடன் சேர்த்து செய்கூலிம், சேதாரம், ஜிஎஸ்டி உள்ளிட்டவை செலுத்தும் பட்சத்தில் ரூ.19,000 முதல் ரூ.20,000 வரை ஒரு கிராமுக்கு செலுத்த வேண்டும்.

இதுவே நீங்கள் தங்க நாணயமாக வாங்க போகிறீர்கள் என்றால் அதற்கு சேதாரம் செலுத்த தேவையில்லை. மற்றபடி செய்கூலி மற்றும் ஜிஎஸ்டி செலுத்தினால் போதுமானது. அதாவது ஒரு கிராம் தங்கத்தை ஆபரணமாக வாங்குவதற்கும், நாணயமாக வாங்குவதற்கும் சிறிது அளவு வித்தியாசம் இருக்கும். தற்போதுள்ள சூழலில் ரூ.1 லட்சத்திற்கு 5 முதல் 6 கிராம் வரை தங்கத்தை வாங்க முடியும்.

