Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
வியர்வையை வெல்வோம்: கோடையில் உங்கள் கூந்தலை ஜொலிக்க வைக்க 5 ரகசியங்கள்!

வியர்வையை வெல்வோம்: கோடையில் உங்கள் கூந்தலை ஜொலிக்க வைக்க 5 ரகசியங்கள்!

TV9 Tamil 2 weeks ago
வெயில் மற்றும் ஈரப்பதமான காலங்களில் உச்சந்தலையில் வியர்வை தங்குவதால் பூஞ்சை தொற்று ஏற்பட்டு பொடுகு மற்றும் அரிப்பு உண்டாகிறது.
காற்றில் உள்ள ஈரப்பதம் கூந்தலின் மென்மையைப் பாதித்து அதைச் சிடுக்காகவும் வறண்டதாகவும் மாற்றுகிறது. வியர்வை மற்றும் மாசுக்கள் உச்சந்தலையின் துவாரங்களை அடைத்துக் கொள்வதால் முடி வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. உச்சந்தலையைச் சுத்தமாக வைத்திருக்க மென்மையான ஷாம்புகளைப் பயன்படுத்துவது அவசியம். அடிக்கடி தலைக்குக் குளிப்பது உச்சந்தலையின் இயற்கையான எண்ணெய்ப் பசையை நீக்கி, சருமத்தை வறட்சியடையச் செய்யும். வேர்களில் கனமான எண்ணெய்களைத் தடவுவது வியர்வையைத் தேக்கி வீக்கங்களை உண்டாக்கும். எனவே, சரியான இடைவெளியில் முறையான பராமரிப்பை மேற்கொள்வது கூந்தல் ஆரோக்கியத்திற்கு அடிப்படையாகும்.

உச்சந்தலை ஆரோக்கியத்தின் முக்கியத்துவம்

கோடைக்காலம் தொடங்கிவிட்டாலே நாம் சருமத்தைப் பாதுகாக்க சன்ஸ்கிரீன் மற்றும் லோஷன்களைப் பயன்படுத்துகிறோம். ஆனால், நம் உடலின் ஒரு அங்கமான உச்சந்தலையை (Scalp) கவனிக்கத் தவறிவிடுகிறோம். வெயிலின் தாக்கம் மற்றும் காற்றில் உள்ள ஈரப்பதம் காரணமாக உச்சந்தலையில் அதிகப்படியான எண்ணெய் சுரப்பு, வியர்வை மற்றும் அழுக்குகள் சேருகின்றன. இது கூந்தலை எளிதில் பிசுபிசுப்பாக மாற்றவதோடு, பொடுகு மற்றும் முடி உதிர்வு போன்ற பிரச்சினைகளுக்கும் வழிவகுக்கிறது. எனவே, கூந்தலின் நுனியை விட வேர்ப்பகுதியான உச்சந்தலையைச் சுத்தமாக வைத்திருப்பதே கோடைக்கால கூந்தல் பராமரிப்பின் முதல் படியாகும்.

ஈரப்பதத்தால் ஏற்படும் பாதிப்புகள்

காற்றில் ஈரப்பதம் அதிகரிக்கும் போது, உச்சந்தலையில் வியர்வை தங்கி ஒருவித ஈரமான சூழலை உருவாக்குகிறது. இந்தச் சூழலில் 'மலாசீசியா' (Malassezia) போன்ற பூஞ்சை கிருமிகள் வேகமாக வளர்கின்றன. இதனால் உச்சந்தலையில் அரிப்பு, வீக்கம் மற்றும் செதில்கள் போன்ற பொடுகுத் தொல்லைகள் ஏற்படுகின்றன என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். மேலும், ஈரப்பதமான காற்றில் உள்ள ஈரத்தை கூந்தல் உறிஞ்சுவதால், தலைமுடி வறண்டு, மென்மையிழந்து, கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு சிடுக்காக மாறுகிறது.

அழுக்கு மற்றும் எண்ணெய் சுரப்பு

வியர்வை, சுற்றுச்சூழல் மாசு மற்றும் நாம் பயன்படுத்தும் ஹேர் தயாரிப்புகளின் எஞ்சிய பகுதிகள் ஒன்றாகச் சேர்ந்து உச்சந்தலையில் உள்ள துவாரங்களை அடைக்கின்றன. இது "ஒட்டும் தன்மை கொண்ட" (Sticky scalp) ஒரு சூழலை உருவாக்குகிறது. இத்தகைய அடைப்புகள் கூந்தல் வளர்ச்சியைப் பாதிப்பதோடு, பாக்டீரியா தொற்று ஏற்படவும் காரணமாகின்றன. குறிப்பாக இந்தியக் கோடைக்காலத்தில் வீசும் வெப்பக் காற்றும், தூசியும் இந்த நிலையை மேலும் மோசமாக்குகின்றன. : 
கெமிக்கல் இல்லாமல் முகம் பொலிவாகணுமா..? இதை யூஸ் பண்ணுங்க..!

சரியான பராமரிப்பு முறைகள்

அதிகப்படியான எண்ணெய் சுரப்பைக் குறைக்க அடிக்கடி தலைக்குக் குளிப்பது சில நேரங்களில் எதிர்மறையான விளைவுகளைத் தரும். வீரியம் மிக்க ஷாம்புகளைப் பயன்படுத்தி அடிக்கடி தலை அலசும் போது, உச்சந்தலையின் இயற்கையான ஈரப்பதம் நீங்கி விடுகிறது. இதனால் இழந்த ஈரப்பதத்தை ஈடுகட்ட உச்சந்தலை இன்னும் அதிகமாக எண்ணெயைச் சுரக்கத் தொடங்கும். அதேபோல், அடர்த்தியான எண்ணெய்களை நேரடியாக வேர்களில் தேய்ப்பது வியர்வையை வெளியேற விடாமல் தடுத்து, அரிப்பு மற்றும் கொப்புளங்களை உண்டாக்கக்கூடும். எனவே, மென்மையான மற்றும் சமநிலைப்படுத்தும் தயாரிப்புகளைப் பயன்படுத்துவதே சிறந்தது.
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: TV9 Tamil