இன்று இந்திய பங்குச்சந்தை ஒரு அதிரடியான மாற்றத்தை சந்தித்தது. வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 1,400 புள்ளிகளுக்கும் அதிகமாகவும், நிஃப்டி 400 புள்ளிகளும் சரிந்தன.
ஈரான் மீது அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து தாக்குதல் நடத்துவார் என்ற அச்சத்தால் கச்சா எண்ணெய் விலை 4 டாலர் வரை உயர்ந்ததே இந்த வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. இருப்பினும், மதியத்திற்கு பிறகு உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்களின் ஆதரவாலும், தகவல் தொழில்நுட்ப துறை பங்குகளின் எழுச்சியாலும் சந்தை மீண்டும் மீண்டெழுந்தது.
வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 185 புள்ளிகள் உயர்ந்து 73,319 புள்ளிகளிலும், நிஃப்டி 33 புள்ளிகள் உயர்ந்து 22,713 புள்ளிகளிலும் நிலைபெற்றன. ஆரம்பத்தில் காணப்பட்ட கடும் பீதிக்கு பிறகு, புதிய எதிர்மறை செய்திகள் வராததால் முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்க தொடங்கினர்.
ஈரானுடனான போர் பதற்றங்களுக்கு இடையிலும் இந்திய பங்குச்சந்தை காட்டிய இந்த உறுதி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை அளித்துள்ளது. நிபுணர்கள் தற்போது எஸ்சிஐபி முறையிலான முதலீடுகளை தொடருமாறு அறிவுறுத்துகின்றனர்.
Edited by Siva

