கடந்த பல வருடங்களாகவே தமிழக சட்டசபை தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்துதான் காங்கிரஸ் தேர்தலை சந்தித்து வருகிறது.
அதேபோல் 2026 சட்டமன்ற தேர்தலிலும் திமுகவுடன் கூட்டணி என காங்கிரஸ் அறிவித்தது. ஆனால் அதே நேரம் விஜய்க்கு இளைஞர்களிடம் இருக்கும் வரவேற்பை பார்த்த ராகுல் காந்தி தவெகவுடன் கூட்டணி அமைக்க விருப்பப்பட்டார். தவெகவுடன் பேச்சுவார்த்தையும் நடந்தது.
பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் திமுக - காங்கிரஸ் கூட்டணி தொடருமா என்பதில் சந்தேகமும், குழப்பமும் நீடித்து வந்தது. ஆனால், காங்கிரஸ் தவெகவுடன் போய்விடக்கூடாது என்பதற்காக அந்த கட்சிக்கு 8 தொகுதிகளை கொடுத்து கூட்டணியை முக ஸ்டாலின் உறுதி செய்தார்.
பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் திமுக - காங்கிரஸ் கூட்டணி தொடருமா என்பதில் சந்தேகமும், குழப்பமும் நீடித்து வந்தது. ஆனால், காங்கிரஸ் தவெகவுடன் போய்விடக்கூடாது என்பதற்காக அந்த கட்சிக்கு 8 தொகுதிகளை கொடுத்து கூட்டணியை முக ஸ்டாலின் உறுதி செய்தார்.
தவெகவுக்கு சென்று விடுவோம் என சொல்லி பயமுறுத்தியே 25 தொகுதிகளை கொடுப்பேன் என சொன்ன ஸ்டாலினிடம் மூன்று தொகுதிகளை அதிகமாக கேட்டுப் பெற்றுக் கொண்டார் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை. ஒருபக்கம் சோனியா காந்தி மற்றும் மல்லிகார்ஜுனா கார்கே ஆகியோர் திமுகவுடன் கூட்டணி அமைக்க விரும்பியதால் திமுக காங்கிரஸ் முடிவானது.
ஆனால் தற்போது தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில் காங்கிரஸ் போட்டியிட்ட 28 தொகுதிகளில் நான்கு தொகுதிகளில் கடலூர், குளச்சல், மயிலாடுதுறை, விளவங்கோடு ஆகிய 4 தொகுதியில் மட்டுமே காங்கிரஸ் முன்னிலையில் இருக்கிறது. மற்ற 24 தொகுதிகளிலும் காங்கிரஸ் பின்னடைவை சந்தித்திருக்கிறது. இதுவே தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்திருந்தால் ஆட்சி மற்றும் அதிகாரத்தில் பங்கு கிடைத்திருக்கும். இப்போது காங்கிரஸுக்கு 'வட போச்சே' மொமெண்டாக மாறிவிட்டது.

