அணு ஆயுதம் வைத்துக் கொள்ளக் கூடாது எனக்கூறி ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் துவங்கிய போர் ஒரு மாதத்தை தாண்டி இப்போதும் நடைபெற்று வருகிறது.
இஸ்ரேலின் தாக்குதலில் ஈரானிய தலைவர் கமேனி கொல்லப்பட்டார்.. அவர் குடும்பத்தினரும் இறந்து போனார்கள்.. அதோடு இஸ்ரேல் தாக்குதலில் பல பள்ளி குழந்தைகளும் இறந்து போனார்கள். எனவே இதற்கெல்லாம் பழிவாங்கும் நடவடிக்கையாக ஈரான் திருப்பி தாக்கி வருகிறது..
குறிப்பாக ஈரான் அமெரிக்காவுக்கு உதவி வரும் வளைகுடா நாடுகளின் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இதன் காரணமாக வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்கும் கச்சா எண்ணெய் செல்லவில்லை. எனவே, எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது.. இந்தியா உள்ளிட்ட பல மாநிலங்களிலும் வணிக சிலிண்டர் கிடைக்காமல் ஹோட்டல்கள் மூடப்படும் நிலை ஏற்பட்டிருக்கிறது..
ஒருபக்கம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 'ஈரானை அழித்திவிட்டோம்.. ஈரானை முடித்து விட்டோம்.. அங்கு ஆட்சி மாறிவிட்டது.. இன்னும் இரண்டு வாரங்களில் போர் முடிவுக்கு வரும்' என்றெல்லாம் பேட்டி கொடுத்து வருகிறார்.
இந்நிலையில்தான், அமெரிக்காவின் A-10 WARTHOG ரக தாக்குதல் விமானத்தை ஈரானிய பாதுகாப்பு படை சுட்டு வீழ்த்தியதாக ஈரான் அரசு ஊடகங்கள் தெரிவித்திருக்கிறது. பாரசீக வளைகுடா பகுதியில் அந்த விமானம் பறந்து கொண்டிருந்தபோது இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், விமானம் கடலில் விழுந்துவிட்டதாகவும் சொல்லப்படுகிறது.
ஏற்கனவே அமெரிக்காவின் F-15E ஒரு போர் விமானம் ஈரானிய ராணுவத்தால் வீழ்த்தப்பட்ட நிலையில் இது அமெரிக்காவுக்கு இது இரண்டாவது இழப்பாகக் கருதப்படுகிறது.

