நீட் தேர்வு வினாத்தாள் கசிந்தது மற்றும் தேர்வில் நடைபெற்ற முறைகேடு ஆகியவற்றால் கோபமடைந்த இளைஞர்கள் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் எனக்கூறி டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த சில நாட்களாகவே போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இந்நிலையில் தர்மேந்திர பிரதான் பதவி விலகுவதாக அறிவித்திருக்கிறார். அவர் வெளியிட்டுள்ள பதிவில் ' இளைஞர்கள் சதி வலையில் சிக்கி விட மாட்டேன்.. இந்தியாவில் இளைஞர் சக்தியே நமது உண்மையான பலம்.. அவர்களின் கனவுகளை எதிர்பார்ப்புகளை மதிக்கிறேன். கடந்த 10 நாட்களாக நடந்த சம்பவங்களை பார்த்து மனம் கலங்கி போயிருக்கிறேன்' என பதிவிட்டிருக்கிறார். இதையடுத்து இந்த வெற்றிய கரப்பான் ஜனதா கட்சியை சேர்ந்த இளைஞர்களும், மாணவர்களும் கொண்டடி வருகிறார்கள்.

