பெட்ரோல், டீசல், வணிக சிலிண்டர் ஆகியவற்றின் விலை இன்று மீண்டும் உயர்த்தப்பட்டிருக்கிறது. ஈரான் - அமெரிக்கா போர் நடந்ததன் காரணமாக கடந்த பல மாதங்களாகவே கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்தது.
இதன் காரணமாக பெட்ரோல், டீசல் மற்றும் ஹோட்டல்களில் பயன்படுத்தப்படும் வணிக சிலிண்டரின் விலைகள் உயர்த்தப்பட்டது.
இதனால் உணவகங்களில் விலையும் உயர்ந்தது.கடைசியாக மே 29ஆம் தேதி பெட்ரோலுக்கு 24 பைசா அதிகரித்து ஒரு லிட்டர் 108.01 விலைக்கு விற்கப்பட்டது. அதேபோல் டீசல் 23 பைசா உயர்ந்து ஒரு லிட்டர் 99.78க்கு விற்கப்பட்டது.
இதனால் உணவகங்களில் விலையும் உயர்ந்தது.கடைசியாக மே 29ஆம் தேதி பெட்ரோலுக்கு 24 பைசா அதிகரித்து ஒரு லிட்டர் 108.01 விலைக்கு விற்கப்பட்டது. அதேபோல் டீசல் 23 பைசா உயர்ந்து ஒரு லிட்டர் 99.78க்கு விற்கப்பட்டது.
அதன்பின் 30ஆம் தேதி பெட்ரோல் 24 பைசாவும், டீசல் அளவு 21 பைசாவும் குறைந்த நிலையில் இன்று பெட்ரோலுக்கு 11 பைசா உயர்ந்து ஒரு லிட்டர் 107.87 க்கும், டீசல் விலை 10 பைசா உயர்ந்து லிட்டர் 99.65க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் வணிக பயன்பாட்டு சிலிண்டர் இன்று 46 உயர்ந்து 3,283க்கு விற்பனை செய்யப்படுகிறது..

