பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில் "ஐஐடி பாபா" என்று பிரபலமடைந்த அபய், தனது திருமணத்திற்கு பிறகு மனைவி பிரீத்திகாவுடன் தனது சொந்த ஊரான ஹரியானாவின் ஜஜ்ஜருக்கு வருகை தந்துள்ளார்.
பெங்களூருவைச் சேர்ந்த பிரீத்திகாவை மணந்த அபய், வங்கி கணக்கு தொடர்பான பணிகளுக்காக இங்கு வந்துள்ளார். இவரை காணவும், செல்ஃபி எடுக்கவும் அப்பகுதி மக்கள் பெருமளவில் திரண்டனர்.
தனது எதிர்கால திட்டங்கள் குறித்து பேசிய அவர், இமாச்சலப் பிரதேசத்தில் வசித்து வருவதாகவும், தற்போது 'ஸ்ரீ பல்கலைக்கழகம்' ஒன்றை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்த பல்கலைக்கழகம் கல்வி அறிவையும், ஆன்மீகம் மற்றும் தியானம் சார்ந்த உண்மைகளையும் ஒருங்கிணைந்து வழங்கும் ஒரு இடமாகத் திகழும் என்று அவர் விளக்கினார்.
உலகளாவிய கவனச்சிதறல்களில் இருந்து விலகி இருப்பது ஆன்மீக வளர்ச்சிக்கு அவசியம் என்றும், தனது மனைவியும் இதே லட்சியத்திற்காகவே பணியாற்றி வருவதாகவும் அவர் ஊடகங்களிடம் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
Edited by Siva

