Dailyhunt

முகக்கவசம் அணியாவிட்டால்'' ரூ. 500 அபராதம்...ரெயில்வேதுறை அறிவிப்பு

Webdunia 5 years ago
கொரோனா தொற்றால் சாதாரண மக்கள் மமுதல் அரசியல்வாதிகள், விளையாட்டு வீரர்கள் மற்றும் சினிமா நட்சத்திரங்கள் என பலரும் பாதிக்கப்படுவருகின்றனர்.

இந்நிலையில் கொரொனா இரண்டாம் அலை பரவலில் இருந்து மக்களைக் காப்பாற்ற மத்திய அரசு மாநில அரசுகளுடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

இந்நிலையில், ரயில்நிலையங்களில் பயணிகள் கட்டாயம் முககவசம் அணிந்து செல்லவேண்டுமென ரயில்வேதுறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

மேலும் நாடு முழுவதிலும் உள்ள ரயில்வே நிலையங்களில் முககவசம் இன்றி நடமாடினால் ரூ.500 அபராதம் விதிக்கப்படு ம் என அனைத்து மண்டல ரெயில்வேகளுக்கும் மத்திய ரெயில்வே உத்தரவிட்டுள்ளது.
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Webdunia Tamil