தற்போதெல்லாம் உறவுகளுக்கு இடையே கொடுக்கப்படும் அன்பும், முக்கியத்துவமும், மரியாதையும் குறைந்துவிட்டது என பலரும் சொல்கிறார்கள்.
தற்போது உலக கோப்பை கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. இதில் அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளும் பங்கேற்று விளையாடி வருகின்றன..
இந்நிலையில் சொந்த வீடு வாங்குவதற்காக வைத்திருந்த 12 லட்ச ரூபாய் பணத்தை கால்பந்து உலக கோப்பை தொடருக்கு தனது 80 வயது தாத்தாவை அழைத்து செல்வதற்காக ஜேக்கப் (21) என்கிற இளைஞர் செலவழித்திருக்கிறார். இது தொடர்பான புகைப்படத்தை அவர் தனது சமூக வலைதளங்களில் பதிவிட அவரின் பதிவு சமூகவலைத்தளங்களில் வைரலானது. எனவே, அவரை பலரும் பாராட்டி வருகின்றனர்.
அதோடு, அவர் செலவு செய்த அந்த தொகையை அவருக்கு கொடுப்பதாக அமெரிக்கவை சேர்ந்த Melawin என்கிற நிறுவனம் உறுதியளித்துள்ளது. சிறுவயதில் தனக்காக செலவழித்த தாத்தாவின் விருப்பத்தை நிறைவேற்றவே இதை செய்ததாக ஜேக்கப் நெகிழ்ச்சியுடன் கூறியிருக்கிறார்.

