Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
தவெக அமைச்சர்கள் பதவியேறு விழா!.. மீண்டும் முதலிடத்தில் வந்தே மாதரம்!..

தவெக அமைச்சர்கள் பதவியேறு விழா!.. மீண்டும் முதலிடத்தில் வந்தே மாதரம்!..

Webdunia 1 week ago
மிழகத்தின் தவெக ஆட்சி அமைந்துள்ள நிலையில் ஏற்கனவே விஜய் உள்ளிட்ட 10 எம்.எல்.ஏக்கள் அமைச்சராக பதவியேற்றனர்.
என்.ஆனந்த், செங்கோட்டையன், சிடி நிர்மல் குமார், அருண் ராஜ், ராஜ் மோகன் உள்ளிட்ட பலரும் அதில் அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்டனர்.

இந்நிலயில், மேலும், தவெக அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டு மேலும் 23 அமைச்சர்கள் இன்று ஆளுநர் மாளிகையில் பதவியேற்றுக்கொண்டனர். இந்த விழா தொடங்கிய போது முதலில் வந்தே மாதரம் ஒழிக்கப்பட்டது. அதன்பின் ஜன கண மன ஒலிக்கப்பட்டது. மூன்றாவதாக தமிழ்த் தாய் வாழ்த்து ஒலிக்கப்பட்டது. ஏற்கனவே விஜய் முதல்வராக பதவியேற்ற நிகழ்வில் வந்தே மாதரம் முதலில் பாடுபட்டதற்கு திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்..


இதையடுத்து அந்த தவறு மீண்டும் நடக்காமல் பார்த்துக் கொள்கிறோம் என தகவல் தரப்பில் கூறப்பட்டிருந்த நிலையில் தற்போது ஆளுநர் மாளிகையில் அமைச்சர்கள் பதவியேற்ற நிகழ்வில் தமிழ்த் தாய் வாழ்த்து மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறது
. எனவே, பலரும் இதை விமர்சிக்க துவங்கியுள்ளனர்.

அதேநேரம், விழா ஆளுநர் மாளிகையில் நடைபெறுவதால் அங்கு மத்திய அரசின் வழிமுறைகளிலேயே பின்பற்றுவார்கள் என இதற்கு விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது..
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Webdunia Tamil