Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
வயநாட்டில் நிலச்சரிவு!. 5 பேர் பலி!.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ...

வயநாட்டில் நிலச்சரிவு!. 5 பேர் பலி!.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ...

Webdunia 1 week ago
கேரளாவில் வயநாடு பகுதியில் அதிக மழை பெய்யும் போது அங்கு நிலச்சரிவு ஏற்பட்டு உயிர் பலி ஏற்படும் சம்பவம் தொடர்ந்து வருகிறது.
ஏற்கனவே 2024ம் வருடம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்நிலையில்தன, வயநாடு மீண்டும் ஒரு நிலைச்சரிவை சந்தித்திருக்கிறது..

கேரள மாநிலம் வயநாட்டில் மேப்பாடி என்கிற ஊரின் அருகே வயநாடு - கல்லாடி இடையே சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில்தான், அந்த பகுதியில் இன்று 22.6 சென்டிமீட்டர் வரை மழை பெய்தது. இதன் காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது. சுரங்கப்பாதைக்காக தோண்டப்பட்ட மண் சரிந்து ஒரு வீடும், தேவாலயமும் முழுமையாக சேதமடைந்துள்ளது. அதேபோல் அங்கிருந்து ஒரு பேருந்து நிறுத்தமும், பாலமும் மண்ணுக்குள் புதைந்து விட்டது. சிலர் மண்ணில் புதைந்துவிட்டனர். இதுவரை 6 பேர் மீட்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் அனைவருமே வெளிமாநில தொழிலாளர்கள்...

ஒருபக்கம் தொழிலாளர்களை ஏற்றி சென்ற இரண்டு பேருந்துகள் மண்ணில் புதைந்து போனது.. மேலும் சில தொழிலாளர்களும் நிலச்சரிவில் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அந்த பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டு வருவதால் அங்கு வசிக்கும் மக்கள் அங்கிருந்து வெளியேறி வருகிறார்கள். இந்நிலையில்தான், வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்ட சம்பவம் வீடு ஒன்றில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருக்கிறது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Webdunia Tamil