2025 ஏப்ரலில் நடந்த பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு காஷ்மீரில் (PoJK) உள்ள 9 பயங்கரவாத உள்கட்டமைப்புத் தளங்களைக் குறிவைத்து இந்தியா, 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டது.
இந்நிலையில், 'ஆபரேஷன் சிந்தூரில்' 300 வீரர்கள் கொல்லப்பட்டதை ஒன்றிய அரசு மூடி மறைத்துவிட்டது என்று இந்திய ராணுவத்தின் JCO ( Junior Commissioned Officer) அனுராக் தாக்கூர் கூறியதாக வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. மேலும் பரவி வரும் வீடியோவில் 'ANI' ஊடகத்தின் லோகோவும் இடம்பெற்றுள்ளதை தெளிவாகக் காண முடிகிறது.
உண்மை என்ன?
பரவி வரும் வீடியோ குறித்து "
எனவே வீடியோ AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எடிட் செய்யப்பட்டிக்கலாம் என்ற சந்தேகம் எழவே, பரவி வரும் வீடியோவை "Hive Moderation" இணையதளப் பக்கத்தில் பதிவேற்றி ஆய்வு செய்தோம். ஆய்வின் முடிவில், இது AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட வீடியோ தான் என்பதை உறுதி செய்யமுடிந்தது.
மேலும், "பரவி வரும் வீடியோ போலியாக எடிட் செய்யப்பட்டது" என மறுப்பு தெரிவித்து, ஒன்றிய அரசின்
முடிவு:
நம் தேடலில், 'ஆபரேஷன் சிந்தூரில் 300 வீரர்கள் கொல்லப்பட்டதை ஒன்றிய அரசு மூடி மறைத்துவிட்டது. என்று இந்திய ராணுவ அதிகாரி கூறியதாகப் பரப்பப்படும் வீடியோ உண்மையானதல்ல. 'ANI' ஊடகப் பக்கத்தில் ஏப்ரல் 22 அன்று வெளியிடப்பட்ட உண்மையான வீடியோவை, AI தொழில்நுட்பம் மூலம் எடிட் செய்து தவறாகப் பரப்பி வருகின்றனர் என்பது தெளிவாகிறது.

