Dailyhunt
பெரியார் விருது பெற்றவர்களின் தன் விவரக் குறிப்பு

பெரியார் விருது பெற்றவர்களின் தன் விவரக் குறிப்பு

டாக்டர் சோம.இளங்கோவன் டாக்டர் சோம.இளங்கோவன் தந்தை பெரியார் அவர் களின் தொண்டன் என்றும், ஆசிரியர் அவர்களின் மாணவன் என்றும் தன்னைப் பெருமையுடன் அறிமுகம் செய்து கொள்பவர் திரு. சோம. இளங்கோவன் அவர்கள்.காரணம்?சிறுவயது முதலே திராவிடர் கழகக் கூட்டங்களுக்கும், மாநாடுகளுக்கும் தனது சித்தப்பா பி.வி.ஆர். எனப்படும் பிவே. இராமச்சந்திரன் அவர்களுடன் சென்று வந்ததுதான் என்கிறார் திரு. சோம.இளங்கோவன். ஆம்; வழிய வழிய பெரியாரியத் தாய்ப்பால் குடித்து வளர்ந்த பிள்ளை இவர்! அதனால்தான், பள்ளி நாட்களிலேயே கையில் மெகாபோனை எடுத்துக் கொண்டு உள்ளூரில் நடைபெறும் திராவிடர் கழக நிகழ்ச்சிகள் பற்றித் தெருத்தெருவாகப்போய் அறிவிப்பு செய்வது, போராட்டங்களின்போது முழக்கங்கள் எழுப்புவது என்று வாழ்க்கைக்கு வனப்பு சேர்த்திருக்கிறார்.1971ஆம் ஆண்டு பெரியார் திடலில் பெரியாரைச் சந்தித்துப் பெற்ற அறிவுரைகளோடு அமெரிக்கா சென்ற இவர், குடல் மருத்துவராகி சிகாகோவில் செயலாற்றினார்.அத்துடன் சிகாகோ தமிழ்ச்சங்கம், வட அமெரிக்க தமிழ்ச்சங்கப்பேரவை ஆகியவற்றின் தலைமைப் பொறுப் பேற்று தமிழ்ப் பணியும் ஆற்றி வருகிறார்.25 ஆண்டுகளுக்கு முன் பெரியார் பன்னாட்டு அமைப்பைத் தொடங்கி பெரியாரியலை பன்னாட்டு அளவில் பரப்பும் பணிகளில் ஒரு பாலமாக இருப்பவர்.2017ஆம் ஆண்டு ஜெர்மன் நாட்டிலுள்ள கொல்லோன் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற முதல் சுயமரியாதை பன்னாட்டு மாநாட்டை சிறப்பாக ஒருங்கிணைத்து நடத்திய தில் இவரது பங்கு அளப்பரியது!அதேபோல், 2019ஆம் ஆண்டு அமெரிக்க மேரிலாண்டில் நடைபெற்ற மனிதநேய சுயமரியாதை பன்னாட்டு மாநாட்டி லும் இவரது பங்கானது மிகச் சிறப்பானதாகும்!சமூக நீதிக் காவலர் வி.பி.சிங் உள்ளிட்ட தலைவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் சமூக நீதிக்கான விருதை பெரியார் பன்னாட்டு அமைப்பின் மூலம் வழங்கி வருகிறார்.நண்பர்களுடன் இணைந்து "வீரமணி சமூகநீதி விருது" நிறுவியதோடு, அந்த விருதை, அமெரிக்காவின் தலைசிறந்த மனிதநேயப் பற்றாளர் பேராசிரியர் பால்கர்ட்சுவை தமிழ்நாட் டிற்கு அழைத்து வந்து மாண்புமிகு கலைஞர் அவர்கட்கு சமூகநீதிக்கான வீரமணி விருதை வழங்கச் செய்து பெருமைச் சேர்த்தார்.உலகிலுள்ள மற்ற நாடுகளும் நமது இயக்கத்திற்கும் பாலமாக இருந்து பெரியார் கொள்கைகளை பன்னாட்டு அளவில் பரப்புவதில் ஈடு இணையற்றவர் மருத்துவர் சோம.இளங்கோவன்.
அப்படிப்பட்ட சிறப்புகளைப் பெற்ற சோம. இளங்கோவன் அவர்களின் பணிகளைப் பாராட்டி 2019ஆம் ஆண்டிற்கான "பெரியார் விருது" வழங்கப்படுகிறது.மருத்துவர் நா.ஜெயராமன் ஒவ்வொரு நாளும் தன்னைப் புதுப்பித்துக்கொண்டிருப்பது புதுக்கோட்டை மண்அது 24.6.1955ஆம் நாளன்று டாக்டர் நா.ஜெயராமன் பிறந்த போது தன்னை மீண்டும் புதுப்பித்துக்கொண்டது.டாக்டர் நா.ஜெயராமனின் தந்தை நாகய்யா, குழந்தைப்ப ருவத்திலேயே தந்தை பெரியாரின் பகுத்தறிவுப்பாதையில் இவருக்கு நடக்கக் கற்றுக்கொடுத்திருக்கிறார்.அந்தப்பயிற்சியின் பயனாக, பல் மருத்துவரான இவர் அடித்தட்டு மக்களின் மூளை மருத்துவராகவும் செயல்பட்டி ருக்கிறார்.அ.மணிமேகலை அவர்களை காதலித்து திருமணம் செய்து கொண்டார் டாக்டர் நா.ஜெயராமன்அது காதல் திருமணம் மட்டுமல்ல, ஜாதி மறுப்புத் திருமணமம் கூட.கூடுதலாக நம் திராவிட இன மாணவர்களையும் காதலித்த இவர், அவர்களுக்கு கல்வி அறிவு கிட்டும்வகையில், தம் கல்லூரி நாள்களிலேயே இசைக்கச்சேரி ஒன்றை நடத்தி, அதில் வசூலான நிதியின்மூலம் புத்தக வங்கி தொடங்கி சேவை புரிந்திருக்கிறார்.1996ஆம் ஆண்டு டாக்டர் அம்பேத்கர் ஃபெலோஷிப் விருதும், பாரதிய தலித் சாகித்ய அகாடமி விருதும் பெற்ற இவர், காரல்மார்க்சின் கம்யூனிசக் கொள்கையிலும் ஈடுபாடு கொள்ள ஆரம்பித்தார்.தமிழ்மண்ணில் முத்தமிழ்போல் முகிழ்த்த அம்பேத்கர், பெரியார், காரல்மார்க்ஸ் ஆகியோரின் கொள்கைகளை மக்களுக்கு எடுத்துச்சென்று அவர்களை பண்படுத்தும் வகையில் அ.பெ.க. பன்னாட்டு நிறுவனம் ஒன்றை கடந்த 2002ஆம் ஆண்டு தொடங்கி இன்றும நடத்தி வருகிறார்.தமிழ்நாட்டில் சங்கீத மும்மூர்த்திகள் போன்று வாழ்வியல் மும்மூரத்திகளான அம்பேத்கர், பெரியார், காரல்மார்க்ஸ் ஆகியோரின் ஆறாயிரம் நூல்களைக் கொண்டு ஒரு நூலகம் உருவாகியிருக்கிறார்.படித்துறைப் போல, மக்கள் தமது அக அழுக்கு போக குளிக்கும் படிப்புத்துறையாக அந்த நூலகம் செயல்பட்டு வருகிறது.காந்தியின் தீண்டாமை, மகனுக்கு மடல், ஆஷ் படு கொலை, புனைவும் வரைவும், அம்பேத்கர் இந்துமயப்படுத்த முடியாத தத்துவம், மேட்டுக்குடி தலித்துகளுக்கு போன்ற நூல்களை எழுதியுள்ளார்.டாக்டர் நா.ஜெயராமன் அவர்களின் இத்தகைய சமூகப் பணிகளைப் பாராட்டி, அவருக்கு 2019ஆம் ஆண்டு தந்தை பெரியார் நினைவு நாளில் 'பெரியார் விருது' வழங்கி சிறப்பிக் கப்படுகிறது.திருமுருகன் காந்தி 2009இல் ஈழத்தில் நடந்த தமிழின அழிப்பு வேலையை உலகிற்கு உரக்கச் சொல்லியவர்களில் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி முக்கியமானவர் ஆவார்.அய்.டி., ஆங்கிலம் என எனக்கென்னவென்று இருந்த ஏராளமான இளைஞர்களின் மத்தியில் ஈழத்தின் மீது ஆர்வம் ஏற்படச் செய்தவர். தமிழகத்தில் மீத்தேன் போராட்டம், நெடுவாசல், WTO ஒப்பந்தத்திற்கு எதிரான போராட்டம் என இயங்கி வருபவர் திருமுருகன்காந்தி.

உலக வல்லரசுகள் அரங்கேற்றிய இன அழிப்பைக் கண்டித்தும், ஈழத்திற்கு ஆதரவாகவும் ஆண்டுதோறும் மே 17 இயக்கத்தின் சார்பாக நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது."ஏறினால் ரெயில்; இறங்கினால் ஜெயில்" என்ற விதி செய்து, ஆதிக்கவர்க்கம் தமது எதிர்ப்பாளர்களை முடக்க முயன்று வருகிற காலம் இது!இந்த விதியால் வதைக்கப்படும் முக்கியமான போராளி தோழர் திருமுருகன் காந்தி.ஈழத்தமிழர் இறுதிப்போரில், குரூரமாகவும், கொடூரமாக வும் கொன்று முடிக்கப்பட்ட தமிழ்ச் சகோதர, சகோதரிகளின் - போராளிகளின் நினைவு நாளான மே 29, 2017 அன்று அமைதியாக மெழுகுவர்த்தி ஏந்தி கண்டனம் தெரிவித்ததற்காக, இவர் மீது குண்டர் சட்டம் ஏவப்பட்டது.பல்வேறு தரப்பினரும், அதன் உச்சகட்டமாக அய்.நா. மனித உரிமை மன்றமே கண்டித்ததையடுத்து 4 மாதங்கழித்து விடுதலை செய்யப்பட்டார்.அன்றிலிருந்து மே 17 இயக்கம் தொடங்கி, தொடர்ந்து நடத்தி வருகிறார் தோழர் திருமுருகன் காந்தி.தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் மிருகத்தனமாக துப்பாக்கி சூடு நடத்தி 13 பேரைக் கொன்றதை குறித்து அய்.நா. 38ஆவது மனித உரிமை கூட்டத்தொடரில் பேசிவிட்டுத் திரும்பிய தோழர் திருமுருகன் காந்தியை பெங்களூரு விமான நிலையத்தில் வைத்து, கைது செய்த காவல்துறையினர் பெங்களூருவிலி ருந்து சென்னைக்குக் கொண்டு வந்து நீதிபதி முன் ஆஜர் படுத்தினர். "கைது நடவடிக்கை தவறானது, உடனே அவரை விடுதலை செய்யுங்கள்" என்று நீதிபதி உத்தரவிட்டதையடுத்து வெளியில் வந்த இவரை அங்கேயே காரணம் சொல்லாமல் மீண்டும் கைது செய்து வழக்குத் தொடுத்தது காவல்துறை.2009ஆம் ஆண்டு ஈழத் தமிழர் இன அழிப்பு நடந்தபோது களமிறங்கிய இளைய தலைமுறை போராளிகளில் தெரிந்த சிந்தனையும், தொடர் செயல்பாடுகளும் கொண்டவர்களுள் முக்கியமானவர் திருமுருகன் காந்தி!2018ஆம் ஆண்டு பெரியாரியல் கூட்டமைப்பு சார்பில் திருச்சியில் நடைபெற்ற கருஞ்சட்டைப் பேரணிக்கு முக்கிய பணியாற்றிவர்களில் முக்கியமானவர் திருமுகன் காந்தி!2019ஆம் ஆண்டும் பெரியாரியக் கூட்டமைப்பு சார்பில் சென்னையில் திருக்குறள் மாநாடு நடத்தியதில் குறிப்பிடத் தக்கவர் திருமுருகன் காந்தி!இப்படியாக தோழர் திருமுருகன் காந்தி அவர்களின் செயல்பாடுகளை முடக்கும் வகையில், இதுவரை அவர்மீது 39 வழக்குகள் போட்டு ஜெயில் ஜெயிலாக அலைக்கழித்து வருகின்றது தமிழகக் காவல்துறை."குதிரை கீழே தள்ளியது போதாதென்று, குழியும் பறித்தது போல", கடந்த 2 ஆண்டுகளாக தோழர் திருமுருகன் காந்தி அவர்களை "தொடர் குற்றவாளிகள் பட்டியலில்" வைத்திருக் கிறது தமிழகக் காவல்துறை. ஆனால் திராவிடர் கழகம் அவரை, "தொடர் போராளிகள் பட்டியலில்" வைத்து, 2019 ஆம் ஆண்டுக்காள "பெரியர் விருது" வழங்கி பெருமைப் படுத்துகிறது.
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Viduthalai