மீண்டும் உலக சாம்பியன் ஆனது இந்தியா.. இன்று நடந்த இறுதிப் போட்டியில் நியூசிலாந்தினியை 96 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை தக்க வைத்துக் கொண்டது.
டி20 உலக கோப்பை: போட்டியில் மீண்டும் உலக சாம்பியன் ஆனது இந்தியா.. நியூசிலாந்துக்கு எதிரான இறுதிப் போட்டியில் அபார வெற்றி பெற்றது இந்திய அணி..
முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 255 ரன்கள் எடுத்தது. அணியின் தொடக்க வீரர் சஞ்சு சாம்சன் 46 பந்துகளில் 89 ரன்கள் எடுத்தார். அதில் ஐந்து 4 எட்டு 6 ரன்கள் அடங்கும். அவருக்கு துணையாக அபிஷேக் ஷர்மா 21 பந்தில் 52 கண்கள் குடித்தார் அதில் 6 நான்கு ரன்களும் 3 சிக்ஸ்களும் அடங்கும். இந்த இணை 7 ஓவரில் 98 ரன்கள் சேர்த்தது. இதுவே இந்திய அணி வெற்றி பெற மிகச்சிறந்த அடித்தளமாக அமைந்தது. அபிஷேக் ஷர்மாவை தொடர்ந்து அந்த இஷான் கிஷன் 25 பந்தில் 54 ரன்கள் எடுத்தார் அதில் தலா நான்கு 4 மற்றும் சிக்ஸ் அடங்கும். இதனால் இந்திய அணி ஐந்து விக்கெட் இழப்புக்கு 255 ரன்கள் குவித்தது.
ALSO READ:ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!
256 ரன்கள் இலக்காக கொண்டு ஆடிய நியூசிலாந்து அணி 18.5 ஓவர்களில் 159 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இந்திய அணி 96 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று மீண்டும் உலக சாம்பியன் ஆனது.
பும்ரா அபாரமாக பந்து வீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
