Dailyhunt
வளர்ச்சியின் புதிய அத்தியாயம் தூத்துக்குடியில் தொடங்கியுள்ளது. பிரதமர் மோடி பேச்சு!

வளர்ச்சியின் புதிய அத்தியாயம் தூத்துக்குடியில் தொடங்கியுள்ளது. பிரதமர் மோடி பேச்சு!

PM Modi : இரண்டு நாட்கள் பயணமாக நேற்று தமிழகம் வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடி, இன்று தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தில் ரூ.17,300 கோடி மதிப்பிலான உட்கட்டமைப்பு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
இதுபோன்று பல்வேறு முடிவுற்ற திட்டங்களையும் காணொலி மூலம் திறந்து வைத்தார் பிரதமர், தூத்துக்குடியில் உள்ள குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளத்துக்கும் அடிக்கல் நாட்டி வைத்தார்.

Read More – குலசை ராக்கெட் ஏவுதளத்திற்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி..!

அதேசமயத்தில், தூத்துக்குடியில் நடைபெறும் நிகழ்ச்சியில் தேசிய நெடுஞ்சாலைகள் திட்டம் உள்ளிட்ட முடிக்கப்பட்ட 36 திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார். மேலும், இந்தியாவின் முதல் ஹைட்ரஜனை எரிபொருளாக கொண்ட, பயணிகள் கப்பலை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இதனைத்தொடர்ந்து, அந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி வணக்கம் என கூறி உரையாற்றினார். அப்போது பேசியதாவது, தூத்துக்குடியில் தொடங்கி வைக்கப்பட்டுள்ள திட்டங்கள் இந்தியாவின் பல இடங்களில் வளர்ச்சிக்கு உந்துதலாக இருக்கும். நாட்டின் வளர்ச்சிக்கு இது மிக முக்கியமானது.

Read More – செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடையாது.! 3 மாதத்தில் வழக்கை முடிக்க உத்தரவு.!

அதன்படி, வளர்ச்சியின் புதிய அத்தியாயம் தூத்துக்குடியில் தொடங்கியுள்ளது. இந்த திட்டங்களால் தமிழ்நாட்டில் லட்சக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். நாடு வளர்ச்சியடைந்த பாரதம் என்ற நோக்கத்தை நோக்கி பயணித்து வருகிறது. வளர்ச்சியடைந்த பாரதத்தில் தமிழ்நாட்டின் பங்கு மகத்துவமானதாக இருக்கும்.

தூத்துக்குடியை கப்பல் போக்குவரத்து மையமாக மாற்ற, அளித்த உறுதிமொழி நிறைவேற்றப்பட்டுள்ளது. தூத்துக்குடி மக்களின் கோரிக்கைகள், கனவுகளை இன்று நனவாக்கியுள்ளோம். இந்திய வரைபடத்தின் வளர்ச்சியில் முன்னேற்றத்தின் எடுத்துக்காட்டு இன்றைய நிகழ்வாகும். ஹைட்ரஜன் படகு காசியின் கங்கையில் பயணிக்கும்போது தமிழ்நாடு உடனான நல்ல உறவு பலப்படும்.

கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் உள்ளிட்டவையால் பசுமையாக்கலில் தூத்துக்குடி மையமாக மாறும். ரயில் மற்றும் சாலை பணிகளை தொடங்கி வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். புதிய சாலை மற்றும் ரயில் பணிகளால் சுற்றுலாத்துறை மேம்படும். 75 கலங்கரை விளக்கங்களை மேம்படுத்தப்பட்ட சுற்றுலா தளங்களாக மாற்றும் பெருமை எனக்கு கிடைத்துள்ளது.

– நிறைவேறாத கனவு… ராஜீவ்காந்தி கொலை குற்றவாளி சாந்தன் சென்னையில் காலமானார்.!

தற்போது நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் காங்கிரஸ் ஆட்சியில் கோரிக்கையாகவே இருந்தனர். காங்கிரஸ் ஆட்சி மீது நேரடியாக குற்றசாட்டுகளை முன்வைக்கிறேன், அவை கசப்பான உண்மைகள். ஆனால், தமிழ்நாட்டில் பாஜக அரசு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறது.

தடைகளை எல்லாம் தாண்டி தமிழ்நாட்டின் வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்திய தீருவோம். மக்களின் சேவகனான நான் உங்களின் விருப்பங்கள், கோரிக்கைகளை நிறைவேற்றி வருகிறேன். பாஜக அரசின் சாதனைகளை அச்சியிடாமல் நாளிதழ்களை மாநில அரசு தடுக்கிறது எனவும் தெரிவித்தார்.

The post வளர்ச்சியின் புதிய அத்தியாயம் தூத்துக்குடியில் தொடங்கியுள்ளது… பிரதமர் மோடி பேச்சு! first appeared on Dinasuvadu.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dinasuvadu