தமிழ்நாட்டில் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) புதிய அரசு பொறுப்பேற்ற பின், கடந்த ஜூன் மாதத்தில் பல முக்கிய மக்கள் நலத் திட்டங்களையும், அதிரடி ஊழல் ஒழிப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது.
தவெக அரசின் முதல் மாத சாதனைகள் மற்றும் அரசாணைகள் குறித்த முழுமையான தொகுப்பை விரிவாகக் காண்போம்.
டாஸ்மாக் நிர்வாக சீர்திருத்தம்: ஆண்டுக்கு ₹1,200 கோடி கூடுதல் வருவாய்
முதலமைச்சர் விஜய் பொறுப்பேற்றவுடன் கல்வி நிறுவனங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகில் இருந்த 717 மதுபானக் கடைகளை மூட உத்தரவிட்டார். மேலும், டாஸ்மாக் மதுபானப் பெட்டிகளுக்கான கட்டண வசூல் முறையில் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுவரை அதிகாரப்பூர்வமற்ற முறையில் கட்சி நிதி என்ற பெயரில் திசைதிருப்பப்பட்ட தொகை இனி நேரடியாக அரசு கணக்கில் சேர்க்கப்படும். இதன் மூலம் ஹாட், பீர் மற்றும் ஒயின் பெட்டிகளுக்கான கூடுதல் கட்டணங்கள் வாயிலாக அரசுக்கு ஆண்டுக்கு ரூ.1,200 கோடி கூடுதல் வருவாய் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
பெண்களின் பாதுகாப்பிற்கு சிங்கப்பெண் அதிரடி படை
பெண்களுக்கு எதிரான குற்றங்களை ஒடுக்கவும் அவர்களின் பாதுகாப்பை பலப்படுத்தவும் சிங்கப்பெண் சிறப்புப் படை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டது. இதற்காக ₹354 கோடி பட்ஜெட் ஒதுக்கீடு செய்யப்பட்டு, முதற்கட்டமாக 2,500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட்டுச் செயல்பட்டு வருகின்றன.
40 ஆண்டு காலப் போராட்டத்திற்குப் பின் மலைவாழ் மக்களுக்கு பேருந்து வசதி
போக்குவரத்து வசதிகள் இன்றி பல தசாப்தங்களாகத் தவித்து வந்த மலைவாழ் கிராம மக்களின் நீண்ட காலக் கோரிக்கையை ஏற்று, புதிய பேருந்து சேவைகள் ஜூன் மாதத்தில் தவெக அரசால் தொடங்கி வைக்கப்பட்டன.
தனியார் பள்ளி கட்டண வெளிப்படைத்தன்மை உத்தரவு
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளும் தங்களின் ஆண்டு கல்வி கட்டண விவரங்களைப் பெற்றோர்கள் எளிதாகப் பார்க்கும் வகையில், பள்ளி வளாகத்தின் அறிவிப்பு பலகையில் (Notice Board) கட்டாயம் ஒட்ட வேண்டும் என அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
மூடப்பட்ட அம்மா உணவகங்கள் புதுப்பித்துத் திறப்பு
முந்தைய காலகட்டங்களில் கவனிக்கப்படாமல் இருந்த அல்லது மூடப்பட்ட அம்மா உணவகங்கள் அனைத்தும் தவெக அரசால் தரம் உயர்த்தப்பட்டு, புதுப்பிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்காக மீண்டும் அனைத்து இடங்களிலும் திறக்கப்பட்டுள்ளன.
டெண்டர் முறையில் வெளிப்படைத்தன்மை: இ-டெண்டராக மாற்றம்
அரசுத் துறைகளில் உள்ள அனைத்து ஒப்பந்தப் புள்ளிகளும் (Tenders) முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்பட்டு, ஆன்லைன் (E-Tenders) மூலமாக மட்டுமே மாற்றப்பட்டுள்ளன. இது டெண்டர் ஒதுக்கீட்டில் நடக்கும் ஊழல்களை ஒழிக்கக் கொண்டுவரப்பட்ட நடவடிக்கையாகும்.
கன்னியாகுமரி கப்பல் கட்டுமானத் திட்டம்: 30,000 பேருக்கு வேலைவாய்ப்பு
கன்னியாகுமரி பகுதியில் புதிய கப்பல் கட்டும் தளம் அமைப்பதற்கான பணிகள் துரிதப்படுத்தப்பட்டு, அதன் மூலம் சுமார் 30,000 இளைஞர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
மாநிலக் கடன் நிலை குறித்த வெள்ளை அறிக்கை
முந்தைய திமுக ஆட்சியில் நிலவிய நிதி நிலவரம் மற்றும் மாநிலத்தின் மொத்தக் கடன் பொறுப்புகள் (சுமார் 13 லட்சம் கோடி கடன்கள்) குறித்த உண்மை நிலையை பொதுமக்களுக்கு விளக்கும் வகையில் அரசுத் தரப்பில் வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
300 புதிய பேருந்துகள் மற்றும் போதை விழிப்புணர்வு மாரத்தான்
போக்குவரத்துத் துறையை மேம்படுத்த 300 புதிய அரசுப் பேருந்துகள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. அதே வேளையில், இளைஞர்களிடையே போதைப்பொருள் விழிப்புணர்வை ஏற்படுத்த 21 கிலோமீட்டர் தூர மாரத்தான் ஓட்டப் பந்தயம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
விவசாயக் கடன் ₹75,000 வரை தள்ளுபடி
விவசாயிகளின் சுமையைக் குறைக்கும் நோக்கில், தகுதி வாய்ந்த ஏழை எளிய விவசாயிகளின் கூட்டுறவு வங்கிக் கடன்களில் தலா ₹75,000 வரை தள்ளுபடி செய்வதாக தவெக அரசு அறிவித்து அதற்கான நிதியையும் ஒதுக்கியுள்ளது.
வரம்பு மீறிய கட்சி நிர்வாகிகள் மீதான அதிரடி நீக்கம்
பள்ளிகளில் அல்லது பொது இடங்களில் வரம்பு மீறி அத்துமீறலில் ஈடுபட்ட சொந்தக் கட்சியின் (தவெக) ஒன்றியச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் உடனடியாகப் பதவியில் இருந்து நீக்கப்பட்டு, தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் சலுகை கிடையாது என்பதை அரசு உணர்த்தியுள்ளது.
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: ₹755 கோடி ஒதுக்கீடு
அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் மற்றும் பிரசவித்த தாயைக் கௌரவிக்கும் முகமாக தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் 1 கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும். இதற்காக ஆண்டுதோறும் ₹755.83 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

