Dailyhunt
இல்லறத்தின் தொடக்கம்: பண்டைய கால எட்டு வகை திருமண முறைகள்!

இல்லறத்தின் தொடக்கம்: பண்டைய கால எட்டு வகை திருமண முறைகள்!

Kalki Online 3 weeks ago

னித நாகரிகத்தின் வளர்ச்சியில் 'திருமணம்' என்பது ஒரு மிக முக்கியமான சமூகக் கட்டமைப்பு ஆகும்.

பண்டைக்காலச் சமூகத்தில் ஆணும் பெண்ணும் இணைந்து இல்லறம் நடத்துவதை முறைப்படுத்த பல்வேறு வழிமுறைகள் பின்பற்றப்பட்டன. குறிப்பாக, வடநூல் மரபுகளிலும் பண்டைய தர்ம சாஸ்திரங்களிலும் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் விவாதிக்கப்பட்ட திருமண முறைகளை'அட்ட விவாகங்கள்' அல்லது 'எட்டுவகைத் திருமணங்கள்' என்று அழைப்பர். இவை அறவழியில் தொடங்கும் மணம் முதல் முறையற்ற மணங்கள் வரை அனைத்தையும் வகைப்படுத்துகின்றன.

திருமணம் என்பது என்ன?

மிகவும் பரிசுத்தமான நிகழ்ச்சியாகத்தான் திருமணத்தை இந்து மதம் காண்கிறது. ஒருவர் தனிப்பட்ட வாழ்க்கை முறைக்குள் செல்வது திருமணம் முடிந்த பிறகுதான். நாம் இன்று காணும் சமூகம் நிலைத்து நிற்பது இதன் அடிப்படையில்தான். தனி மனித வாழ்நிலையின் தர்மம், அதர்மம், காமம், குரோதம் ஆகியவற்றிற்கான சூழ்நிலைகள் திருமண வாழ்க்கையில் இருந்துதான் உருவாவது ஆகும். திருமணத்திற்கு ஏற்ற வயது. ஆண்களுக்கு ஒற்றைப்படை வயதிலும், பெண்களுக்கு இரட்டைப் படை வயதிலும் திருமணம் செய்வதுதான் நல்லது.

ஆறு வகை கர்மங்கள்: அக்னி சாட்சியாக நடத்தப்படும் இந்துமதத் திருமணங்களில் முக்கியமாக ஆறு கர்மங்கள் செய்யப்படுகின்றன. அவை தாலி கட்டுவது, மாலை அணிவித்தல், வஸ்த்திர தானம், கன்னிகாதானம், பிரதிக்ஷணம், ஆசிர்வாதம் ஆகியவையாகும். அனைத்து இந்துமதத் திருமணங்களிலும் இந்த ஆசாரங்கள் கடைபிடிக்கப் படுகின்றன.

எட்டுவகைத் திருமண முறைகள்:

1.பிரம்மம் (Brahma): பெற்றோரால் நிச்சயிக்கப்பட்டு, ஒழுக்கமும் கல்வியும் உடைய ஒருவனுக்கு, முறைப்படி கன்னிகாதானம் செய்து வைக்கப்படும் மிக உயர்ந்த அறவழியான திருமணம்.

2.பிராஜாபத்தியம் (Prajapatya): "நீங்கள் இருவரும் இணைந்து இல்லற அறத்தைச் செய்யுங்கள்" என்று வாழ்த்தி, தகுதியுள்ள ஒருவனுக்குப் பெண்ணைத் திருமணம் செய்து கொடுப்பது.

3. ஆரிடம் (Arsha): மணமகன் ஒரு ஜோடி பசுவையும் காளையையும் பெண்ணின் தந்தையிடம் தந்து, அறநெறிப்படி பெண்ணை மணம் முடிப்பது. (இது விலைக்கு வாங்குவது போன்றது அல்ல; வேள்விக்காகச் செய்யப்படும் சடங்கு).

கோபத்தைக் குறைக்க வேண்டுமா? இந்த 10 வினாடி இடைவெளி உங்களுக்கு உதவும்!

4. தெய்வம் (Daiva): ஒரு வேள்வியை (யாகத்தை) முறைப்படி நடத்தி முடிக்கும் ஆச்சாரியாருக்கு அல்லது அந்த வேள்வியில் முன்னின்று நடத்துபவருக்குப் பெண்ணைத் திருமணம் செய்து கொடுப்பது.

5. காந்தர்வம் (Gandharva): பெற்றோரின் தலையீடு இன்றி, ஆணும் பெண்ணும் ஒருவரையொருவர் விரும்பி சுயமாகச் செய்துகொள்ளும் காதல் திருமணம். இது தமிழர்களின்'களவு'முறைக்கு ஒப்பானது.

6. ஆசுரம் (Asura): பெண்ணின் தந்தைக்கோ அல்லது உறவினர்களுக்கோ மணமகன் செல்வம் அல்லது பொருளைக் கொடுத்துப் பெண்ணை மணப்பது.

7. இராட்சசம் (Rakshasa): பெண்ணின் சம்மதமோ, பெற்றோரின் சம்மதமோ இன்றி, அவளைக் கட்டாயப்படுத்தி அல்லது கடத்திச் சென்று திருமணம் செய்வது.

8. பைசாசம் (Paishacha): தூக்கத்திலோ அல்லது மயக்கத்திலோ இருக்கும் ஒரு பெண்ணை வஞ்சித்து மணம் செய்வது. இது மிகக் கீழான முறையாகக் கருதப்படுகிறது.

இவற்றில் முதல் நான்கு முறைகளும் (பிரம்மம், பிராஜாபத்தியம், ஆரிடம், தெய்வம்) மேன்மையானவை யாகவும், காந்தர்வம் இயற்கை நெறியாகவும் அக்காலத்தில் கருதப்பட்டன. கடைசி மூன்று முறைகளும் (ஆசுரம், இராட்சசம், பைசாசம்) சமூகத்தால் அங்கீகரிக்கப்படாத அல்லது தவிர்க்கப்பட வேண்டிய முறைகளாகக் கூறப்பட்டுள்ளன.

காலமாற்றத்திற்கு ஏற்ப இம்முறைகள் பல மறைந்திருந்தாலும், சமூக ஒழுக்கத்தையும் குடும்ப மாண்பையும் காப்பதே திருமணத்தின் அடிப்படை நோக்கமாக இன்றும் தொடர்கிறது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalki Online