mangayar malar stripஆங்கிலேயர்களிடமிருந்து சுதந்திரம் அடைந்த போதிலும் நம் இந்தியா, பெண்களின் முன்னேற்றத்தில் பின் தங்கி தான் இருந்தது.
ஒரு சில பெண்களின் விடா முயற்சியால் தான் இன்றைக்கு பெண்கள் எல்லா துறையிலும் தங்களுடைய தடத்தை பதித்துள்ளார்கள். அந்த வகையில் ஐந்து விதமான துறையில் முக்கிய சின்னமாக திகழ்ந்த பெண்களை பற்றி இப்பதிவில் பார்க்கலாம்.
1. இந்திரா காந்தி (Indira Gandhi):
Indra Gandhiஇந்திய அரசியல் வரலாற்றில் குறிப்பிடத்தக்க பெண்மணியான 'இரும்புப் பெண்மணி' என்றழைக்கப் பட்ட இந்திரா காந்தி அவர்கள் இந்தியாவின் முதல் பெண் பிரதமராக பதவியேற்றார். இவர் இந்திய தேசிய காங்கிரஸின் ஒரு முக்கிய சின்னமாகவும் இருந்தார்.
இந்திரா காந்தி அவர்களின் அரசியல் முடிவுகள் சர்ச்சைக்குரியதாக இருந்தாலும், அவர் ஒரு பெண்ணாக, உலகத் தலைவர்களுடன் தொடர்புகொண்டு தேசிய பாதுகாப்பு குறித்து துணிச்சலான முடிவுகளை எடுக்கும்போது காதி அல்லது பாரம்பரிய பட்டு புடவை அணிந்த ஒருவராக தான் வெளிப்பட்டார். அவர் தனது தலையை உயர்த்தி இந்தியாவின் பெருமையை நிலைநிறுத்தினார். இந்திரா காந்தி அவர்கள் உச்சத்தில் இருந்தபோது, இந்தியப் பெண்கள் ஆண்களுடன் அணிவகுத்துச் சென்று நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிக்க பெரிய முன்னேற்றங்களை மேற்கொண்டார்கள் என்பது மிக சிறப்பான விஷயமாகும்.
2. Dr. கிரண் பேடி(Kiran Bedi):
Kiranbedi1972 ஆம் ஆண்டு ஐபிஎஸ் பணியில் சேர்ந்த முதல் பெண்மணி Dr. கிரண் பேடி ஆவார். இவர் இந்தியப் பெண்களின் கற்பனையைத் தூண்டினார். டாக்டர் கிரண் பேடி இந்திய யூனியன் பிரதேசமான புதுச்சேரியின் முன்னாள் லெப்டினன்ட் கவர்னராகவும் இருந்தார். தன்னுடைய தைரியத்தாலும், அச்சமற்ற மனப்பான்மையாலும் அனைவரையும் ஊக்குவித்தார். ஒரு உத்வேகப் பேச்சாளராக டாக்டர் கிரண் பேடி அநீதிக்கு எதிராக குரல் எழுப்பவும், நல்ல வாழ்க்கைக்காக கடினமாக உழைக்கவும் அனைவரையும் தொடர்ந்து ஊக்குவித்து வருகிறார்.
இவர் ஒரு அச்சமற்ற மற்றும் கடமைப்பட்ட காவலராக உருவெடுத்து இளம் பெண்களுக்கு ஒரு உத்வேகமாக மாறினார். இன்று இந்தியப் பெண்கள் இராணுவத்திலும், காவல் துறையிலும் தடைகளை தகர்த்து இருக்கிறார்கள் என்றால் அதற்கு கிரண் பேடி அவர்கள் ஒரு முன் மாதிரியாக திகழ்ந்தார் என்றே சொல்லலாம்.
3. பி.டி. உஷா (P.T. Usha):
P. T. Ushaபி.டி. உஷா இந்தியாவின் தலைசிறந்த தடகள வீரர்களில் ஒருவராவார். இவர் பெரும்பாலும் நாட்டின் "தடகள ராணி" என்று எல்லோராலும் அழைக்கப்படுகிறார்.
கேரளாவின் பய்யோலி என்றழைக்கப்படும் தன்னுடைய கிராமத்தின் கடற்கரையில் வெறுங்காலுடன் ஓடி தேசிய தடகளத்தில் உயர்ந்த ஒரு பிம்பத்தை பதித்தார் பி.டி. உஷா அவர்கள். 1980களில் பி.டி. உஷாவின் எழுச்சி இந்தியாவில் பெண்கள் தடகளத்திற்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது.
"பய்யோலி எக்ஸ்பிரஸ்" என்று அழைக்கப்படும் இவர், சர்வதேச அளவில் இந்திய பெண்கள் குறைவிற்கு காரணமாக இருந்த பாலினத் தடைகளை உடைத்தார். இவருடைய சாதனைகள் புதிய தலைமுறை பெண் விளையாட்டு வீரர்களுக்கு உத்வேகத்தை அளித்தன மேலும் விளையாட்டுகளில் பெண்கள் பற்றிய சமூக ஸ்டீரியோடைப்களுக்கு சவாலாகவும் மாற செய்தது.
4. ஷெஹ்னாஸ் உசேன் (Shahnaz Husain):
Shahnaz Husainஅழகுத் துறையில் தொழில் பயிற்சி பிரபலமடைவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே, தொழில்முறை மற்றும் விரிவான பயிற்சியை வழங்கும் ஒரு பிரத்யேக அழகு நிறுவனத்தை இவர் தொடங்கினார். இது ஏராளமான பெண்கள் அழகு மற்றும் நல்வாழ்வில் தொழில்களைத் தொடங்குவதற்கான அதிகாரத்தை அளித்தது. தன்னுடைய பாட்டியின் குறிப்பை வைத்து இயற்கையான முறையில் பல அழகு சாதனப் பொருட்களைத் தயாரிக்கத் தொடங்கிய முதல் பெண் தொழில் முனைவோர் ஷெஹ்னாஸ் ஹுசியன் ஆவார்.
அழகு மற்றும் சரும பராமரிப்புக்கான அவரது தயாரிப்புகள் பாட்டி காலத்து குறிப்புகள் மற்றும் உள்ளூர் மூலிகை பொருட்களிலிருந்து தயாரிக்கப்பட்டதால் அவருடைய தயாரிப்பிற்கு வரவேற்பு அதிகமாக இருந்தன.
அவருடைய அழகு அகாடமியின் மூலமாக 40,000 க்கும் மேற்பட்ட பின்தங்கிய பெண்கள் அழகு மற்றும் நல்வாழ்வுத் துறைகளில் பயிற்சி பெற்று இருக்கிறார்கள். மேலும், இந்த பெண்களுக்கு இவர், அவர்களுக்கு வீட்டிலேயே தொழில்களைத் தொடங்குவதற்கான வசதிகளையும், தொகுப்புகளையும் ஏற்பாடு செய்து கொடுத்திருக்கிறார்.
விண்ணில் கலந்த மின்னல்: 252 முறை பூமியை வலம் வந்த வீராங்கனை!5. ரினி சைமன் கன்னா(Rini simon khanna):
Rini simon khannaரினி சைமன் கன்னாவின் குரல்தான் அகில இந்திய வானொலி (AIR) மற்றும் தூர்தர்ஷன் இரண்டிலிருந்தும் எதிரொலித்த முதல் பெண் குரல். அந்த சமயத்தில் மக்களின் ஊடகத்தின் ஆதாரமாக இருந்தது இந்த செய்திகள் தான். இவருடைய கட்டளையிடும் குரல் தனித்துவமாக திகழ்ந்தது. 1980கள் மற்றும் 1990களில், செய்தி மற்றும் நிகழ்ச்சித் தொகுப்பாளர் போன்ற பதவிகள் ஆண்களால் அதிகமாக ஆதிக்கம் செலுத்தப்பட்டது. தீவிரமான தேசிய மற்றும் சர்வதேச செய்திகளை தெளிவுடனும் ஈர்ப்புடனும் வழங்கும் ஒரு சில பெண்களில் ஒருவராக ரினி தனித்து நின்றார். டெல்லி மெட்ரோவிலும் இவருடைய குரலை கேட்கலாம்.

