Dailyhunt
கோடையை எதிர்கொள்ளத் தயாராகுங்கள். உடல்நலன் காக்க எளிய வழிகள்!

கோடையை எதிர்கொள்ளத் தயாராகுங்கள். உடல்நலன் காக்க எளிய வழிகள்!

Kalki Online 1 year ago

கோடை வெயிலின் தாக்கம் தமிழகத்தில் உணரத் தொடங்கியுள்ள நிலையில், பொது மக்கள் உடல் நலனில் அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகிறது.

பனிக்காலம் முடிந்து கோடை காலம் துவங்கும் இந்த இடைப்பட்ட காலத்தில், வெயிலின் கொடுமை பல மாவட்டங்களில் ஏற்கனவே தலை காட்ட ஆரம்பித்துவிட்டது. குறிப்பாக மாசி மாதத்தில் வெப்பம் அதிகமாக உணரப்பட்டாலும், அக்னி நட்சத்திரம் நெருங்கும் சமயத்தில் வெயிலின் தாக்கம் இன்னும் அதிகரிக்கக்கூடும் என்று வானிலை ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

வெயிலின் தாக்கத்தால் ஏற்படும் உடல் உபாதைகளை சமாளிக்க அரசு மற்றும் பல தொண்டு நிறுவனங்கள் நீர் மற்றும் மோர் பந்தல்களை அமைப்பது வழக்கம். இது ஒருபுறம் இருக்க, கோடை காலத்தில் பரவலாக ஏற்படும் நோய்கள் குறித்தும் நாம் விழிப்புணர்வுடன் இருப்பது மிகவும் முக்கியம். கோடை நோய்களை தடுப்பதற்கான சில முக்கிய வழிமுறைகளை இப்போது பார்க்கலாம்.

முதலாவதாக வியர்க்குரு. வெயில் காலத்தில் வியர்வை அதிகமாக சுரப்பதால், உடலில் வியர்க்குருக்கள் தோன்றுவது இயல்பான ஒன்று. இதனை தவிர்க்க தினமும் இரண்டு முறை குளிப்பதும், உடல் சுகாதாரத்தை பேணுவதும் அவசியம். அரிப்பு அதிகமாக இருந்தால் காலமின் லோஷன் போன்றவற்றை பயன்படுத்தலாம்.

இனி இந்த உப்பு வேண்டாம், அந்த உப்புன்னு கேட்டு வாங்குங்க!

அடுத்து வேனல் கட்டிகள். உடலில் இருந்து வெளியேற வேண்டிய உப்பு மற்றும் யூரியா போன்ற கழிவுகள் சரியாக வெளியேறாமல், அழுக்குடன் சேர்ந்து தோலில் வீக்கம் மற்றும் புண்களை ஏற்படுத்தலாம். இத்தகைய வேனல் கட்டிகளுக்கு வெளிப்பூச்சு களிம்புகளை உபயோகிக்கலாம். மேலும், மெல்லிய துணியால் கட்டிகளை சுத்தமாக வைத்துக்கொள்வது நல்லது.

பூஞ்சை தொற்று கோடை காலத்தில் மிகவும் பொதுவானது. வியர்க்குருக்கள் மீது பூஞ்சை தொற்று ஏற்பட்டால் அரிப்பு, படை மற்றும் தேமல் போன்ற சரும பிரச்சனைகள் உருவாகலாம். இவற்றை தவிர்க்க, பூஞ்சை தொற்றை குணப்படுத்தும் பவுடர் மற்றும் களிம்புகளை உபயோகிக்கலாம். உள்ளாடைகளை துவைத்து வெயிலில் உலர்த்துவது பூஞ்சை தொற்றுகளை தடுக்க உதவும்.

நீர்க்கடுப்பு கோடை காலத்தில் பலரும் சந்திக்கும் ஒரு பிரச்சனை. போதுமான அளவு தண்ணீர் குடிக்காததால் சிறுநீரகப் பாதை தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. நீர்க்கடுப்பை தவிர்க்க ஒரு நாளைக்கு குறைந்தது மூன்று முதல் ஐந்து லிட்டர் தண்ணீர் குடிப்பது அவசியம். தண்ணீர் குறைவாக குடித்தாலும் அவ்வப்போது நீர் அருந்துவதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

வெப்ப அலையிலிருந்து கண்களைப் பாதுகாக்க 7 டிப்ஸ்!

வெப்ப தளர்ச்சி வெயிலின் தாக்கத்தால் உடல் சோர்வு, தலைவலி, வாந்தி மற்றும் மயக்கம் போன்றவை ஏற்படலாம். இவற்றை தவிர்க்க பழங்கள் மற்றும் இயற்கை பானங்களை அதிகம் உட்கொள்ள வேண்டும். மேலும், ஒரு நாளைக்கு இரண்டு முறை குளிப்பது உடல் வெப்பத்தை குறைக்க உதவும்.

கோடை காலத்தில் குளிர் பானங்கள், காபி மற்றும் தேநீர் போன்றவற்றை குறைத்து, இளநீர், மோர், சர்பத், பானகம் மற்றும் பதநீர் போன்ற பாரம்பரிய பானங்களை அதிகம் குடிப்பது நல்லது. எலுமிச்சை சாற்றில் உப்பு அல்லது சர்க்கரை கலந்து குடிப்பதால் உடல் புத்துணர்ச்சி பெறும்.

எனவே, கோடை காலத்தை ஆரோக்கியமாக எதிர்கொள்ள தேவையான அளவு தண்ணீர் குடித்து, சத்தான உணவுகளை உட்கொண்டு, அவசியமில்லாமல் வெயிலில் அலைவதை தவிர்ப்போம்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalki Online