Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
NRI குடும்பங்களின் சாய்ஸ்: ஊட்டியில் சொகுசா? வால்பாறையில் அமைதியா?

NRI குடும்பங்களின் சாய்ஸ்: ஊட்டியில் சொகுசா? வால்பாறையில் அமைதியா?

Kalki Online 3 days ago

வெளிநாடு வாழ் இந்தியர்கள் தங்களின் நீண்ட விடுமுறையில் தாய்நாட்டிற்கு வரும்போது, மலைப்பிரதேசத்திற்கு சுற்றுலா செல்ல விரும்புவார்கள்.

தமிழ்நாட்டின் ஊட்டியும், வால்பாறையும் பிரபலமான மலைவாசஸ்தலங்கள். என்.ஆர்.ஐ குடும்பங்களுக்கு இந்த இரண்டு இடங்களில் எது மிகவும் ஏற்றது என்பது பற்றி இந்தப் பதிவில் விரிவாகப் பார்ப்போம்.

1. சொகுசு வசதிகள் நிறைந்த ஊட்டியில் மலைப்பிரதேச சுற்றுலா:

'மலைகளின் ராணி' என்று அழைக்கப்படும் ஊட்டி, வெளிநாடு வாழ் இந்தியக் குடும்பங்களுக்கு ஏற்ற வகையில், நவீன சொகுசு வசதிகள் அனைத்தையும் கொண்டுள்ளது. தாவரவியல் பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா சிகரம், சாண்டிநாலா படகு சவாரி, குதிரை சவாரி மற்றும் பாரம்பரிய நீலகிரி மலை ரயில் மற்றும் குழந்தைகளுக்குப் பிடித்தமான 'தீம் பார்க்' கலாச்சாரமும் ஊட்டியில் உண்டு.

குடும்பத்துடன் தங்குவதற்கு ஏற்ற வகையில், சர்வதேசத் தரத்திலான சொகுசு ஹோட்டல்களும் பலதரப்பட்ட உணவகங்களும் இங்கு ஏராளமாக உள்ளன. வயதானவர்களுடன் பயணிக்கும்போது ஏற்படும் அவசர மருத்துவத் தேவைகளுக்காக, மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை வசதிகள் இங்கு உள்ளன என்பது இதன் கூடுதல் சிறப்பம்சமாகும்.

இங்கு பிரசித்தி பெற்ற ஹோம்மேடு சாக்லேட்டுகள், நீலகிரி தேயிலை, நீலகிரித் தைலம் மற்றும் யூக்கலிப்டஸ் நறுமண எண்ணெய் ஆகியவற்றைத் தாராளமாக ஷாப்பிங் செய்துகொள்ளலாம்.

ஊட்டியின் குறைபாடுகள்:

சுற்றுலாப் பயணிகளால் அதிகம் விரும்பப்படும் இடமாக இருப்பதால், ஊட்டியில் மக்கள் கூட்டமும் போக்குவரத்து நெரிசலும் மிக அதிகமாக இருக்கும். விடுமுறை நாட்களில் அளவுக்கு அதிகமான கூட்டம் கூடிவிடுகிறது. வெளிநாட்டின் அமைதியான சூழலில் வசித்துவிட்டு, இங்கு வந்து அதிகப்படியான மனித நடமாட்டத்திலும் டிராஃபிக்கிலும் மாட்டிக்கொள்ளும்போது, பயணக் களைப்பும் சோர்வும் ஏற்பட வாய்ப்புண்டு.

2. இயற்கையின் மடியில் நிம்மதி தரும் வால்பாறை மலைப்பிரதேச சுற்றுலா:

கோயம்புத்தூர் மாவட்டத்தில், ஆனைமலைப் புலிகள் காப்பகப் பகுதியில் அமைந்துள்ள வால்பாறை, ஒரு அமைதியான மலைக்கிராமம். நாற்பது கொண்டை ஊசி வளைவுகளைக் கடந்து செல்லும் பயணம் திரில்லிங்கான அனுபவத்தைத் தரும். வெளிநாட்டு வாழ்க்கையின் பரபரப்பான சூழலில் இருந்து விடுபட்டு, மனதை 'ரிலாக்ஸ்' செய்ய நினைப்பவர்களுக்கு மாசற்ற தூய்மையான காற்றும், அமைதியான சூழலும் கொண்ட வால்பாறை ஒரு சொர்க்கமாக இருக்கும்.

 மலைப்பிரதேச சுற்றுலா

எங்கு திரும்பினாலும் கண்ணுக்குக் குளிர்ச்சி தரும் பசுமையான தேயிலைத் தோட்டங்கள், அடர்ந்த காடுகள் மற்றும் அருவிகள் இதனுடைய சிறப்பம்சங்கள். ஊட்டியைப் போலப் பிரம்மாண்டமான சொகுசு வசதிகள் கொண்ட ஹோட்டல்கள் இங்கில்லை என்றாலும், பிரிட்டிஷ் காலத்துத் தேயிலைத் தோட்ட பங்களாக்கள் மற்றும் அழகான தனித்துவமான தங்குமிட வசதிகள் இங்கு நிறைந்துள்ளன.

பட்ஜெட்டைக் குறைத்து அழகை ரசிக்கணுமா? உங்களுக்கான காலநிலைக்கு ஏற்ற சுற்றுலா வழிகாட்டி!

காலை நேரத்தில் சாலையில் வந்து நின்றால், மேகக் கூட்டங்கள் கைகளைத் தொட்டுவிடும் அளவிற்குத் தாழ்வாக இறங்கி வருவது பார்க்க அழகாக இருக்கும். சோலையார் அணை, நல்லமுடி பூஞ்சோலை வியூ பாயிண்ட் போன்ற இடங்கள் இயற்கை எழில் கொஞ்சும் பகுதிகளாகும். சாலையோரங்களிலேயே சில சமயங்களில் வரையாடுகள், சிங்கவால் குரங்குகள் மற்றும் யானைக் கூட்டங்களைக் காண முடியும்.

வால்பாறையின் குறைபாடுகள்:

ஊட்டியைப் போல இங்கு மல்டிபிளக்ஸ் திரையரங்குகளோ அல்லது பெரிய வணிக வளாகங்களோ கிடையாது. பெரிய பொழுதுபோக்கு விளையாட்டுப் பூங்காக்களோ, அவசரத் தேவைகளுக்குப் பெரிய மருத்துவ வசதிகள் கொண்ட மருத்துவமனைகள் இல்லாததால், பொள்ளாச்சி அல்லது கோவை போன்ற சமவெளி நகரங்களுக்குத்தான் செல்ல வேண்டும்.

என்.ஆர்.ஐ யின் சாய்ஸ்?

ஊட்டியின் சீதோஷ்ண நிலை எப்போதும் 'உறைபனி' ரகமாக இருக்கும். சில சமயம் குளிர்காலத்தில் பூஜ்ஜியம் டிகிரி வரை கூட வெப்பநிலை செல்லக்கூடும். வால்பாறையின் காலநிலை எப்போதும் இதமாக இருக்கும்.

சொர்க்கமே பூமியில வந்தாச்சு! லோனாவாலா அருகே ஒளிந்திருக்கும் 'ஆம்பி பள்ளத்தாக்கு' ரகசியங்கள்!

ஊட்டியைப் போலக் கடுமையான குளிர் இருக்காது; இதமான குளிர்ச்சியோடு அடிக்கடி மழையும் பெய்யும். எனவே, பனிப்பிரதேசக் குளிர்ச்சியை விரும்புபவர்கள் ஊட்டியைத் தேர்ந்தெடுக்கலாம்; இதமான குளிர்ச்சியையும் பசுமையையும் விரும்புபவர்கள் வால்பாறையைத் தேர்ந்தெடுக்கலாம்.

கூட்ட நெரிசலைப் பற்றிக் கவலைப்படாமல், அனைத்து விதமான நவீன வசதிகளும் வேண்டும் என்று நினைப்பவர்கள் தாராளமாக ஊட்டியைத் தேர்ந்தெடுக்கலாம். பரபரப்பில்லாத தூய்மையான அமைதியை விரும்புபவர்களுக்கும், சில சமயங்களில் மொபைல் சிக்னல் கூடக் கிடைக்காத சூழலைப் பொறுத்துக்கொண்டு இயற்கையோடு தங்கி வனவிலங்குகளை ரசிக்க நினைப்பவர்களுக்கும் வால்பாறை மிகச் சிறந்த இடமாக இருக்கும்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalki Online