Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
சிறுகதை: நியாயம் என்றால் நியாயம் தான்..!

சிறுகதை: நியாயம் என்றால் நியாயம் தான்..!

Kalki Online 2 weeks ago
 MM

பாலு மனைவி ராதிகாவைக் கூப்பிட்டான்..

"ஏங்க என்ன விஷயம் சொல்லுங்க?"

"டுடே நம்ம பிள்ளைங்களுக்கு மாயவரம் மெட்ரிகுலேசன் பள்ளில டெஸ்ட், அதுல பாஸானா ஆறாவது, எட்டாவது வகுப்புல அட்மிஷன் புாியுதா..?

இரண்டு பேரையும் கிளம்பச்சொல்லு" என்றான்.

"சரிங்க..! துணைக்கு அம்மாவை அனுப்பறேன். போகவர ஆட்டோ முருகன் கிட்ட சொல்லிடுங்க!"

பாலு அம்மாவிடம் பேசினான். "பத்துமணிக்கு ஆட்டோ வரும் பேத்திக ரெண்டு பேரையும் அழைச்சிக்கிட்டு மாயவரம் மெட்ரிகுலேசன் பள்ளிக்கு போ. அங்க தண்டபாணிங்கறவர்கிட்ட சொல்லிருக்கேன். டெஸ்ட் வப்பாங்க நாலு சப்ஜெக்ட். அதில பாஸ் ஆனாதான் அட்மிஷன். வேறு ஏதாவது தேவைன்னா எனக்கு கால் பண்ணு" என்றான்.

"சரி" என்றாள் அம்மா வைதேகி.

பாலுவின் அப்பா இறந்ததால் கருணை அடிப்படையில், ஆறுபாதி மேல்நிலைப் பள்ளியில்அவனுக்கு ஆசிாியர் பணி, பக்கத்தில் விளநகரில் பழைய ஓட்டுவீடு அப்பா கட்டியது. மனைவி ராதிகாவுக்கு மன்னன் பந்தல் காலேஜ்ல லேப் அசிஸ்டென்ட் வேலை. இரண்டே பெண்கள் வேதிகா, தேவிகா.

உள்ளூரில் படிப்பு போதுமென டவுன்ல மெட்ரிக்குலேசன் பள்ளியில் அட்மிஷன் போடறாங்க.

"ஏன்டா நீயோ ராதிகாவோ போகமுடியாதா.." இது அம்மா.

"இல்லம்மா ஸ்கூல்ல மாணவர் சோ்க்கை இருக்கு. இன்னும் பத்து பசங்களை சேக்கனும்; இல்லாட்டி இரண்டு வாத்யாா் பணிமாறுதல்ல வெளி ஸ்கூல் போகனும். அவளுக்கும் காலேஜ்ல அட்மிஷன் நடக்குது. அப்ப லேப்ல வேலை அதனாலதான். நீ போயிட்டுவாம்மா. பேத்திக ரெண்டுபேருக்கும் நீ இருந்தா போதுமே! நீ சொன்னா கேக்கறாங்களே!" என்றான் சிாித்தபடியே.

"சரி.. சரி.. பணம் கொஞ்சம் கூடுதலா கொடு மளிகை சாமான், காய்கறி, மாம்பழம் வாங்கிட்டு வரேன்" என்றாள்.

சிறுகதை: மகிழ்ச்சியைப் பரிசளிப்போம்!

பாலு ராதிகா இருவரும் ஆபீஸ் கிளம்பி போனபிறகு பாட்டியும் பேத்திகளும் மாயவரம் கிளம்பினாா்கள். விளநகர் பெருமாள் கோவில்போய் பாட்டி வேண்டிக்கொண்டாள்.

பாலு சொன்னபடி கோதன்டபாணியைய் பாா்த்தாா்கள். இரண்டு மணி நேரம் டெஸ்ட் நடந்தது. பின்னர் பேத்திகளின் கோாிக்கைக்கு இணங்க சேகர் குவாலிட்டி ஐஸ்கிரீம் கடையில் மில்க்ஷேக் சாப்பிட்டு விட்டு, மகாதானதெரு பிள்ளை கடையில் பாதிாி மாம்பழம், மலைப்பழம் எல்லாம் வாங்கியபின், ராமன்ஸ் அய்யர் காபிகடைல கல்லிடைக்குறிச்சி உளுந்து அப்பளம், ஜவ்வரிசி வடகம், அரிசி அப்பளம் பர்ச்சேஸ் முடித்து, மாா்க்கெட்ல இளங்கோதேவர் கடையில் காய்கறி வாங்கிக்கிட்டு எதிரே உள்ள ஜெனிபர்ல ஸ்வீட், காரம் வாங்கிட்டு புறப்பட்டாா்கள்.

மாலை பாலு அனல்பறக்க வீட்டுக்கு வந்தான்.

"அம்மா.. அம்மா.. எங்க அந்த ரெண்டு கழுதையும் மெட்ரிக் பள்ளில டெஸ்ட் வச்சதில எல்லா கேள்விக்கும் ஏட்டிக்கு போட்டியா பதில் எழுதி பெயிலாயிட்டாங்க .ஆக அட்மிஷன் கிடைக்காது" என சொல்லியபடியே மகளை அடிக்க கை ஓங்கினான்.

காப்பியோடு வந்தாள் மனைவி ராதிகா, "ஏங்க என்ன பிரச்சனை எதுக்காக பொம்பளைப் பிள்ளைய கைநீட்டி அடிக்கப்போறீங்க" என தடுத்தாள்.

 தமிழ் கதை | a grand daughters and their grand mother and their parents

பேத்திகள் ரெண்டு பேரும் பயந்து பாட்டி பின்னால் ஒளிந்து கொண்டன.

"டேய் பாலு.. என்னடா புது பழக்கம் அப்படி அடிக்கனும்னா என்னைய அடி நான்தான் சொல்லிக்கொடுத்தேன். நான்தான் தப்பு தப்பா எழுதச் சொன்னேன். அதெப்படி நீ அரசாங்க சம்பளம் வாங்குவ. உன்னோட பள்ளிக்கு கிராமம் கிராமமா மாணவர் சோ்க்க கேன்வாஸ் போவ. ஆனா உன்னோட பிள்ளைங்க அரசாங்க பள்ளியில படிக்காம தனியாா் பள்ளில படிப்பாங்க!இதென்ன நியாயம். நீ வேலை பாக்கற பள்ளியில பிளஸ் டு வரைக்கும் இருக்கு.

அதை ஒதுக்கிட்டு நீ சுயநலமா உன்னோட பிள்ளைங்கள தனியாா் மெட்ரிக் பள்ளியில அட்மிஷன் போடுவ? அப்ப உன்னோட ஸ்கூல் கல்வித்தரம் அவ்வளவுதானா? உனக்கு பாடம் நடத்த தொியாதா? இதென்ன நியாயம்.

அரசாங்கத்தில வேலை பாக்கறவங்க பிள்ளைங்க அரசாங்க பள்ளியில படிக்கனும்! மாற்றம் மாற்றம்னா எப்படி வரும். நீங்க முதல்ல மாறுங்க. என்னோட பேத்திக ரெண்டு பேரும் உன்னோட பள்ளிக்கூடதிலதான் பிளஸ்டு வரைக்கும் படிக்கனும். என்னாட முடிவில மாற்றம் கிடையாது" என அம்மா உப்புக்கடலை போல பொறியவும், வாய்மூடி மெளனமானான் பாலு.

ராதிகா உள்ளுக்குள் சிாித்தாள். ராதிகா பாதிாிபழத்தை நறுக்கி கொண்டு வந்து அனைவருக்கும் கொடுத்தாள். அதில் இரண்டு துண்டுகளை மகனிடம் கொடுத்தாள் வைதேகி. பாலு எதுவும் சொல்லாமல் வாங்கிசாப்பிட்டான்!

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalki Online