Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
வாய் விட்டு சிரிப்பதால் உண்டாகும் 8 நன்மைகள் தெரியுமா?

வாய் விட்டு சிரிப்பதால் உண்டாகும் 8 நன்மைகள் தெரியுமா?

Kalki Online 2 years ago

'வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போகும்' என்பது பழமொழி. மேலும், அது உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கான நல்வழி.

சிரிப்பின் மேன்மையை உணர்ந்ததால்தான், 1954ம் ஆண்டு, ஜூலை 1ம் தேதியன்று நகைச்சுவை தினம் முதன்முதலாக ஆஸ்திரேலியாவில் கொண்டாடப்பட்டது. இது சிரிப்பு மற்றும் சந்தோஷத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதற்காகத் தொடங்கப்பட்டது.

உலக நகைச்சுவை தினம்: 1979ம் ஆண்டு நகைச்சுவை தினம், உலக நகைச்சுவை தினமாக மாறியது. இது பல நாடுகளில் கொண்டாடப்பட ஆரம்பித்தது.1988ம் ஆண்டு, ஐக்கிய நாடுகள் சபை உலக நகைச்சுவை தினத்தை அங்கீகரித்தன. இது இந்த நாளின் முக்கியத்துவத்தை உலகளாவிய அளவில் வலியுறுத்தியது.

உலகளாவிய கொண்டாட்டம்: ஜூலை 1 அன்று, உலக நகைச்சுவை தினம் பல நாடுகளில் கொண்டாடப்படுகிறது. இது சிரிப்பு மற்றும் சந்தோஷத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதோடு, உறவுகளை வலுப்படுத்துவதிலும் பங்காற்றுகிறது. சிரிப்பு மற்றும் சந்தோஷம் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அவசியமானவை. வாய் விட்டு சிரிப்பதால் பல நன்மைகள் உண்டாகின்றன.

வாய் விட்டு சிரிப்பதால் உண்டாகும் நன்மைகள்:

1. மன அழுத்தம் குறையும்: மன அழுத்தத்துடன் தொடர்புடைய ஹார்மோன் கார்டிசோலின் அளவைக் குறைக்க சிரிப்பு உதவுகிறது. மன அழுத்தம் குறையும்போது ஒருவரால் அமைதியாகவும், நிதானமாகவும் உணர முடிகிறது.

2. மேம்பட்ட மனநிலை: மனம் உற்சாகமாக, மகிழ்ச்சியாக இருக்கும்போது எண்டோர்பின்கள் என்ற இரசாயனங்களை உடல் வெளியிடுகிறது. இவை மகிழ்ச்சியின் உணர்வுகளை மேம்படுத்துவதோடு, வாழ்க்கையில் மிகவும் நேர்மறையான கண்ணோட்டத்திற்கு வழிவகுக்கிறது.

3. மேம்படுத்தப்பட்ட நோய் எதிர்ப்பு சக்தி: வாய் விட்டு சிரிக்கும்போது மனநிலை மட்டும் மேம்படுவதில்லை. அத்துடன் உடலின் நோயெதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கிறது. நோயெதிர்ப்பு செல்கள் மற்றும் ஆன்டிபாடிகளின் உற்பத்தியை அதிகரிக்கிறது. இது தொற்று மற்றும் நோய்களை எதிர்த்துப் போராட உதவுகிறது.

4. வலி நிவாரணம்: சிரிப்பு எண்டோர்பின்களின் வெளியீட்டைத் தூண்டுகிறது. எனவே, இது இயற்கையான வலி நிவாரணியாக செயல்படுகிறது. இது தசை வலி, தலை வலியின் உணர்வைக் குறைக்கவும், வலி ஏற்படும்போது சகிப்புத்தன்மையை மேம்படுத்தவும் உதவும்.

5. இதய ஆரோக்கியம்: சிரிப்பது இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது மற்றும் இரத்த நாளங்களின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. இதயப் பிரச்னைகள் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கிறது. இது இதயத்துடிப்பை வேகப்படுத்துவதோடு, இரத்த ஓட்டத்தையும் சீர்படுத்தி, இதயத்தை ஆரோக்கியமாக வைக்கிறது.

ஸ்மார்ட் போன் உபயோகிப்பதால் உண்டாகும் கண் பாதிப்புகளைத் தடுக்க 6 டிப்ஸ்!

6. சமூக இணைப்பு: உறவுகள், நண்பர்கள், குடும்பத்தினருடன் சிரிப்பைப் பகிர்ந்துகொள்வது, ஒற்றுமை உணர்வுகளை ஊக்குவித்தல் மற்றும் தகவல் தொடர்புகளை மேம்படுத்துகிறது. இதன் மூலம் நட்பு மற்றும் உறவுகளை பலப்படுத்துகிறது. இது சமூகப் பிணைப்பை மேம்படுத்தி, சொந்த பந்தங்களிடையே உறவு மேலாண்மையை அதிகரிக்கும்.

7. தசை தளர்வு: வாய் விட்டு இதயப்பூர்வமாக சிரிக்கும்போது, அது தசைகளை தளர்த்துகிறது மற்றும் உடல் பதற்றத்தை நீக்குகிறது. இந்தத் தளர்வு 45 நிமிடங்கள் வரை நீடிக்கும். இது ஒட்டுமொத்த உடல் நலனை ஊக்குவிக்கும்.

8. மன ஆரோக்கியம்: கவலை மற்றும் மனச்சோர்வின் அறிகுறிகளைக் குறைக்க சிரிப்பு உதவுகிறது. துன்பகரமான எண்ணங்களிலிருந்து விடுபட உதவுகிறது. இது சவாலான சூழ்நிலைகளில் பின்னடைவு மற்றும் சமாளிக்கும் திறன்களை மேம்படுத்துகிறது. மேலும், சிரிப்பு நீண்ட ஆயுளை அளிக்கிறது.

எனவே, தினமும் வாழ்வில் சிரிப்பை இணைத்துக்கொள்வது பல உடல், மன மற்றும் சமூக நன்மைகளுக்கு வழிவகுக்கும். இது ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கான சக்தி வாய்ந்த கருவி என்பதில் ஐயமில்லை.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalki Online