Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
ஜேர்மன் தலைநகரில் கம்பளிப்பூச்சி தொல்லை: கோபத்தில் மக்கள்

ஜேர்மன் தலைநகரில் கம்பளிப்பூச்சி தொல்லை: கோபத்தில் மக்கள்

Lankasri News 3 weeks ago

பிரான்சின் சில பகுதிகளில் கம்பளிப்பூச்சித் தொல்லை நிலவுவது குறித்து செய்திகள் வெளியானது நினைவிருக்கலாம்.

கம்பளிப்பூச்சி பரவலைத் தடுக்க, அதிகாரிகள் மரங்களில் கருப்பு நிற கவர்களைக் கட்டுவது முதலான பல நடவடிக்கைகளை எடுத்துவருகிறார்கள்.

ஆனால், அது குறித்து ஜேர்மனி அதிகாரிகளுக்குத் தெரியவில்லை போலும்!

ஆம், ஜேர்மன் தலைநகர் பெர்லினில் கம்பளிப்பூச்சி பரவல் குறித்து ஆயிரக்கணக்கான புகார்கள் வந்தவண்னம் உள்ளன.

ஜேர்மன் தலைநகரில் கம்பளிப்பூச்சி தொல்லை

கோடை வந்தாலே இந்த கம்பளிப்பூச்சிகளின் பரவலும் அதிகரிக்கத் துவங்கிவிடும். அதுதான் ஜேர்மன் தலைநகர் பெர்லினிலும் நடந்துவருகிறது.

கம்பளிப்பூச்சி தொல்லை குறித்து கோபமடைந்துள்ள மக்கள் அதிகாரிகளுக்கு கொடுக்கும் புகார்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துவர, அதிகாரிகளோ, யார் நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து விவாதத்தில் ஈடுபட்டுவருகிறார்கள்.

அதாவது, மாகாண அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டுமா அல்லது உள்ளூர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டுமா என்பது குறித்து விவாதங்கள் நடக்கிறது.


ஜேர்மனியில் தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு மக்களுக்கு வலியுறுத்தல்

கம்பளிப்பூச்சிகளை அழிக்கும் அல்லது அவற்றின் பரவலைத் தடுக்கும் நடவடிக்கைகள் துவக்கப்பட்டுள்ளன என்றாலும், இந்த நடவடிக்கைளுக்கு பெருமளவில் பணம் வேண்டும் என்பதுதான் விவாதங்களுக்குக் காரணம்.

இந்த கம்பளிப்பூச்சிகளின் உடலில் உள்ள முடிகள் மனிதர்கள் மீது பட்டால், அவை கடும் எரிச்சலையும் அரிப்பையும் ஏற்படுத்துவதுடன், அவை காற்றில் பரவுவதால் சுவாசப் பிரச்சினைகளையும் ஏற்படுத்தும்.

அத்துடன், இந்த கம்பளிப்பூச்சிகளின் உடலிலிருந்து விழுந்த முடிகள், மண்ணில் விழுந்து கிடக்கும் நிலையில், மூன்று ஆண்டுகள் வரை மனிதர்களுக்கும் செல்லப்பிராணிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.

இதற்கிடையில், இந்த பிரச்சினை இத்துடன் முடியாது என்கிறார்கள் நிபுணர்கள். அது, அடுத்த கோடை, அதற்கடுத்த கோடை என தொடர்ந்துகொண்டேயிருக்கும் என அவர்கள் எச்சரிக்கிறார்கள். ஆக, தக்க நடவடிக்கை எடுக்கப்பட்டாலன்றி இந்த பிரச்சினை இப்போதைக்கு தீரப்போவதில்லை என்கிறார்கள் அவர்கள்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Lankasri News