Dailyhunt
ஜேர்மனியில் பண்டிகை நாளில் மரம் விழுந்ததில் குழந்தை உட்பட மூவர் பலி

ஜேர்மனியில் பண்டிகை நாளில் மரம் விழுந்ததில் குழந்தை உட்பட மூவர் பலி

Lankasri News 1 week ago

நேற்றைய தினம் 95க்கும் மேற்பட்ட நாடுகளில் ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட்டது.

பல மேற்கத்திய நாடுகளில் ஈஸ்டர் பண்டிகையில், ஈஸ்டர் முட்டைகளைத் தேடும் ஒரு விளையாட்டு முக்கிய அம்சமாக பின்பற்றப்பட்டு வருகிறது.

மரம் விழுந்ததில் குழந்தை உட்பட மூவர் பலி

இந்நிலையில், வட ஜேர்மனியிலுள்ள Satrupholm நகரில் நேற்று அந்த ஈஸ்டர் முட்டைகளைக் கண்டுபிடிக்கும் விளையாட்டில் பல பெண்களும் சிறுவர்களும் ஈடுபட்டிருந்தார்கள்.

அப்போது வீசிய பலத்த காற்றில், 100 அடி உயர மரம் ஒன்று திடீரென சாய்ந்துள்ளது.

அந்த மரத்தின் கீழ் 21 வயது பெண்ணொருவரும், அவரது மகளான 10 மாதக் குழந்தையும், 16 மற்றும் 18 வயதுடைய இரண்டு இளம்பெண்களும் சிக்கிக்கொண்டுள்ளார்கள்.


வெளிநாட்டு பயணங்களுக்கு இராணுவ அனுமதி: ஜேர்மனி அளித்துள்ள கூடுதல் விளக்கம்

அவர்களில், அந்த 21 வயது பெண், அவரது குழந்தை மற்றும் அந்த 16 வயது இளம்பெண் ஆகியோர் உயிரிழந்துவிட்டார்கள்.

அந்த 18 வயது இளம்பெண் ஹெலிகொப்டர் மூலம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார். அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டுவருகிறது.

பண்டிகை நாளில் நிகழ்ந்த அந்த துயர சம்பவம், அப்பகுதியில் கடும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விடயம் என்னவென்றால், அந்த பகுதிக்கு ஏற்கனவே பலத்த காற்று தொடர்பில் வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Lankasri News