ஜேர்மனியில் புதிய இராணுவ சேவை சட்டம் அமுலுக்கு வந்துள்ளது. அது குறித்து அரசாங்கம் கூடுதல் விளக்கம் அளித்துள்ளது.
இதன்படி, 17 முதல் 45 வயதுக்குள் உள்ள ஆண்கள், மூன்று மாதங்களுக்கு மேல் வெளிநாட்டில் தங்கும் திட்டம் இருந்தால், அதை முன்கூட்டியே இராணுவத்திடம் (Bundeswehr) தெரிவிக்க வேண்டும்.
இந்தியாவின் சில பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்கவும்- கனடா புதிய பயண எச்சரிக்கை
ஜேர்மன் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், "இராணுவ சேவை தற்போது விருப்பத்திற்கேற்ப (voluntary) உள்ளது. எனவே, மூன்று மாதங்களுக்கு மேல் வெளிநாட்டில் தங்க அனுமதி தானாகவே வழங்கப்படும்" என விளக்கம் அளித்துள்ளது.
இந்த சட்டம் 2026 தொடக்கத்தில் அமுலுக்கு வந்திருந்தாலும், குறிப்பிட்ட இந்த விதி சமீபத்தில் Frankfurter Rundschau பத்திரிகை செய்தி வெளியிட்டதையடுத்து பொதுமக்களின் கவனத்திற்கு வந்தது.
ஜேர்மனியின் இராணுவ சேவை தற்போது விருப்பத்திற்கேற்ப இருந்தாலும், படையினர் எண்ணிக்கை குறைந்தால் அல்லது ஐரோப்பாவின் பாதுகாப்பு நிலை மோசமடைந்தால், நாடாளுமன்றம் கட்டாய சேவையை (mandatory service) மீண்டும் அமுல்படுத்த முடியும்.
இந்த விதி, NATO பாதுகாப்புத் திட்டம் மற்றும் ஜேர்மனியின் செயலில் உள்ள படையினரை அதிகரிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாகும்.
சமூக வலைத்தளங்களில், "இது பொதுமக்களுக்கு தெரியாமல் சட்டமாக்கப்பட்டது ஏன்?" என விமர்சனங்கள் எழுந்துள்ளன. அதே நேரத்தில், சிலர், "ஐரோப்பாவின் பாதுகாப்பு சூழ்நிலையில் இது அவசியமான நடவடிக்கை" என ஆதரிக்கின்றனர்.
ஜேர்மனியின் இந்த புதிய சட்டம், இராணுவ சேவையை வலுப்படுத்தும் முயற்சியாகவும், வெளிநாட்டுப் பயணங்களை கட்டுப்படுத்தும் விதமாகவும் பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவிற்கு HMS Prince of Wales போர் கப்பலை அனுப்ப பிரித்தானியா திட்டம்

