Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
தமிழ்நாட்டு தேர்தலில் சட்டவிரோதமாக வாக்களித்த இலங்கை குடியுரிமை கொண்ட தமிழர் கைது

தமிழ்நாட்டு தேர்தலில் சட்டவிரோதமாக வாக்களித்த இலங்கை குடியுரிமை கொண்ட தமிழர் கைது

Lankasri News 2 days ago

சென்னை விமான நிலையத்தில் 65 வயதான இலங்கை குடியுரிமை கொண்ட தமிழர் ஒருவர் சட்டவிரோதமாக வாக்கு செலுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாட்டின் அருப்புக்கோட்டையை பூர்வீகமாகக் கொண்ட அபிரகாம் என்ற இவர், தற்போது பிரான்சில் வசித்து வருகிறார்.

இந்தியாவின் மூன்றாவது பெரிய எண்ணெய் ஏற்றுமதியாளராக மாறியுள்ள நாடு

இலங்கை பாஸ்போர்ட் வைத்திருக்கும் ஆபிரகாம், கடந்த மாதம் தமிழ்நாட்டிற்கு வந்து தனது ஊரில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அபிரகாம், புதன்கிழமை அதிகாலை பிரான்சுக்கு திரும்புவதற்காக சென்னை விமான நிலையத்திற்கு சென்றபோது, குடிவரவு அதிகாரிகள் அவரை சோதனை செய்தனர்.

அப்போது அவரது விரலில் தேர்தல் நாளில் பயன்படுத்திய அழியாத மை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அவர் வாக்களித்தது உறுதி செய்யப்பட்டது.

அவரது பயணம் ரத்து செய்யப்பட்டு, விசாரணைக்காக கைது செய்யப்பட்டார். பின்னர் சென்னை மத்திய குற்றப்பிரிவு பொலிசாரின் பாஸ்போர்ட் பிரிவுக்கு ஒப்படைக்கப்பட்டார். தேர்தல் ஆணையத்திற்கும் இந்த விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23 அன்று நடைபெற்றது. வெளிநாட்டு பாஸ்போர்ட் வைத்தவர்கள் மற்றும் OCI கார்டு வைத்தவர்கள் சட்டவிரோதமாக வாக்களித்ததாக தகவல் கிடைத்ததால், மாநிலம் முழுவதும் விமான நிலையங்களில் கூடுதல் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது. கடந்த இரண்டு வாரங்களில் இதுபோன்ற குற்றச்சாட்டில் 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஐரோப்பிய நாடொன்றுக்கு 5000 வீரர்களை அனுப்பும் அமெரிக்கா., நேட்டோ வரவேற்பு

#TamilNaduElections #IllegalVoting #SriLankanTamil #ChennaiAirport #ElectionCommission #ForeignPassport #IndiaPolitics

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Lankasri News