கோடைக்காலத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
குறிப்பாக குழந்தைகள், பெரியவர்களை விட அதிகமாக உடல் சூட்டால் பாதிக்கப்படுகிறார்கள்.
இதைத் தவிர்க்க உடலை எப்போதும் நீரேற்றத்துடன் வைத்திருக்க வேண்டும்.

நீர் அதிகம் குடிப்பதுடன், ஜூஸ், பானங்கள், நீர்ச்சத்து நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளையும் உணவில் சேர்க்க வேண்டும்.
அத்துடன் தினசரி சமையலில் சில காய்கறிகளை சேர்ப்பது கோடை பிரச்சனைகளை குறைக்க உதவும்.
அந்தவகையில், கோடையில் உடல் சூடு, நீரிழப்பு, செரிமான பிரச்சனைகளைத் தவிர்க்க உதவும் 4 காய்கறிகள் குறித்து பார்க்கலாம்.
என்னென்ன காய்கறிகள்?
வாழைத்தண்டு- வாழைத்தண்டில் நீர்ச்சத்தும் நார்ச்சத்தும் அதிகம் உள்ளது. இது குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது.
சுரைக்காய்- சுரைக்காயில் நீர்ச்சத்து மற்றும் எலக்ட்ரோலைட்டுகள் நிறைந்துள்ளன. இது நீரிழப்பை தடுக்க உதவுகிறது.
மலச்சிக்கல் பிரச்சனையை குணப்படுத்த உதவும் 5 பழக்கங்கள்.., என்னென்ன தெரியுமா?
வெள்ளை பூசணி- வெள்ளை பூசணி அதிக நீர்ச்சத்து கொண்டது. இது உடல் வறட்சியும், சூடும் குறைய உதவுகிறது.
கீரைகள்- கீரைகளில் நார்ச்சத்தும் இரும்புச்சத்தும் அதிகம் உள்ளது. இது உடல் சூட்டை கட்டுப்படுத்துகிறது. வாரத்திற்கு 2 முறை கீரை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் 2026

