Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
நுரையீரல் புற்றுநோய் அபாயம்.. முன்பே கண்டறியும் வசதி.. விஞ்ஞானிகள் சாதனை!

நுரையீரல் புற்றுநோய் அபாயம்.. முன்பே கண்டறியும் வசதி.. விஞ்ஞானிகள் சாதனை!

லகளவில் மனிதர்களை அதிகம் பாதிக்கும் புற்றுநோய்களில் ஒன்றான நுரையீரல் புற்றுநோயை, அது ஏற்படுவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே கண்டறியக்கூடிய ஒரு புதிய ரத்தப் பரிசோதனையை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

பிரான்சிஸ் (Francis) கிரிக் (Crick) நிறுவனத்தைச் சேர்ந்த சர்வதேச விஞ்ஞானிகள் குழு நடத்திய இந்த ஆய்வு, 'செல்' (Cell) இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

 lung cancer

மனித ரத்த பிளாஸ்மாவில் உள்ள 14 முக்கிய புரதங்களைக் கொண்டு, ஒருவருக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகளை முன்கூட்டியே கணிக்க முடியும் என்று அவர்கள் கண்டறிந்துள்ளனர். இதற்கு '14-புரதக் குறியீடு' என்று பெயரிடப்பட்டுள்ளது. யூகே (UK) பயோபேங்க் (Biobank) தரவுகளைக் கொண்டு, சுமார் 48,000 பேரின் ரத்த மாதிரிகளை இயந்திரக் கற்றல் தொழில்நுட்பம் மூலம் ஆய்வு செய்ததில், இந்தப் பரிசோதனை முறை 75 சதவீதத்துக்கும் அதிகமான துல்லியத் தன்மையுடன் புற்றுநோய் பாதிப்பைக் கணித்துள்ளது.

புகைபிடித்தல் மற்றும் காற்று மாசால் ஏற்படும் நுரையீரல் வீக்கங்கள் எவ்வாறு புற்றுநோய் செல்களாக மாறுகின்றன என்பதையும் இந்த ஆய்வு விளக்குகிறது. மேலும், இந்த ஆய்வின் மூலம் நுரையீரல் புற்றுநோய் உருவாகும் அபாயத்தைக் குறைக்கக்கூடிய ஒரு மருந்தும் அடையாளம் காணப்பட்டுள்ளது. எனினும், இந்தப் பரிசோதனை முறை முழுமையாகப் பயன்பாட்டுக்கு வருவதற்கு முன்னால், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்களிடம் இன்னும் விரிவான சோதனைகள் நடத்தப்பட வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 lung cancer

இந்தக் கண்டுபிடிப்பு, ஆரம்ப நிலையிலேயே புற்றுநோயைத் தடுத்து பல உயிர்களைக் காக்க உதவும் ஒரு மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.

அப்பாவா? அம்மாவா?.. குழந்தையின் புத்திசாலித்தனத்துக்கு யாரின் மரபணு காரணம்?
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Puthiya Thalaimurai