Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
கூலி இசை வெளியீட்டு விழாவுக்கு சட்டை போடாம பனியனில் வந்த ஆமீர் கான்: காரணம் இருக்கே

கூலி இசை வெளியீட்டு விழாவுக்கு சட்டை போடாம பனியனில் வந்த ஆமீர் கான்: காரணம் இருக்கே

Samayam Tamil 10 months ago

கூலி ஆடியோ லான்ச் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் கூலி படத்தின் இசை வெளியீட்டு விழா நேரு உள்விளையாட்டரங்கில் நேற்று பிரம்மாண்டமாக நடைபெற்றது.

iframe{min-width: 0px !important;box-sizing: border-box;}

அதில் கலந்து கொண்டு சூப்பராக பேசினார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அவர் மீண்டும் நிம்மதி, சந்தோஷம் பற்றி பேசியது ரசிகர்களை கவலை அடைய செய்திருக்கிறது.

மூத்த மகள் ஐஸ்வர்யாவின் வாழ்க்கை இப்படியாகிவிட்டதே என்று கவலையில் இருக்கிறாரோ தலைவர் என ரசிகர்கள் பேச ஆரம்பித்துவிட்டார்கள். வழக்கம் போன்று சாதாரண உடையில் வந்திருந்தார் ரஜினிகாந்த். ஆனால் சட்டை போடாமல் பனியனுடன் வந்த பாலிவுட் நடிகர் ஆமீர் கானை யாரும் மிஸ் செய்யவில்லை.

கெத்து காட்டிய ஆமீர் கான்

கூலியில் தாஹா எனும் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் ஆமீர் கான் என்று கூறி போஸ்டர் வெளியிட்டது அனைவருக்கும் தெரியும். இந்நிலையில் கூலி விழாவில் ஆமீர் கான் நடந்து வந்ததை பார்த்தபோது போஸ்டர் தான் நினைவுக்கு வந்தது. கேரக்டராகவே மாறி அதே மாதிரி வந்திருந்தார் ஆமீர் கான்.

தாஹா கதாபாத்திர கெட்டப்பில் வந்த ஆமீர் கானை பார்த்தபோது அவருக்கு 60 வயது என்றே சொல்ல முடியாத அளவுக்கு இருந்தார். ஆமீர் கான் இப்படி தாஹாவாக மாறி வருவார் என யாரும் எதிர்பார்க்கவில்லை. இந்நிலையில் வெறும் பனியன் அணிந்து சட்டையை ஸ்டைலாக கையில் வைத்துக் கொண்டு வந்த ஆமீர் கானை வைத்து மீம்ஸ் போடத் துவங்கிவிட்டார்கள்.

தாஹா மீம்ஸ்

கூலி இசை வெளியீட்டு விழாவில் யார் மீம்ஸ் கிரியேட்டர்களிடம் சிக்கப் போகிறார்களோ என நினைத்த நிலையில் ஆமீர் கான் தான் சிக்கியிருக்கிறார். இத்தனை ஆண்டுகளாக அவர் பார்க்காதா மீம்ஸா, அதனால் தற்போது வந்து கொண்டிருக்கும் மீம்ஸுகள் எல்லாம் அவரை பாதிக்காது.

அதே சமயம் ரஜினியை பார்த்ததும் அவரின் காலை தொட்டு ஆசிர்வாதம் வாங்க குனிந்தார் ஆமீர் கான். அதை பார்த்த ரஜினியோ ஆமீர் கானை தடுத்து நிறுத்தி கட்டி அணைத்துக் கொண்டார். ஆமீர் கானின் அந்த மரியாதை தான் ரஜினி ரசிகர்களுக்கு மிகவும் பிடித்திருக்கிறது.

என்ன தான் பாலிவுட்டில் பெரிய ஸ்டாராக இருந்தாலும் கூட ரஜினியிடம் அவர் ஆசி பெற்ற விதம் தமிழ் சினிமா ரசிகர்களை நெகிழ வைத்துவிட்டது. ஆமீர் கான் நடித்திருக்கும் முதல் தமிழ் படம் கூலி ஆகும். இதையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஆக்ஷன் கதையில் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் அவர்.

பாலிவுட்டில் லோகேஷ்

ஆமீர் கானை கோலிவுட்டுக்கு அழைத்து வந்த லோகேஷ் கனகராஜ், அவர் மூலம் பாலிவுட் செல்லவிருக்கிறார். பெரும் பொருட்செலவில் பான் உலக படமாக உருவாகவிருக்கிறது அது.

முன்னதாக கூலி படத்தில் ஆமீர் கான் நடிப்பதை வெளியே சொல்ல வேண்டாம். படம் பார்க்கும்போது ரசிகர்கள் தெரிந்து கொள்ளட்டும் என்பது தான் லோகேஷ் கனகராஜின் திட்டம். அதற்காக தான் ஆமீர் வரும் காட்சிகளை ராஜஸ்தானில் படமாக்கினார். ஆனால் அந்த தகவல் எப்படியோ கசிந்துவிட்டது.

அந்த நேரத்தில் தன் சிதாரே ஜமீன் பர் படத்தை விளம்பரம் செய்யச் சென்ற ஆமீர் கானிடம் கூலி பற்றி கேட்கவே அவரால் பொய் சொல்ல முடியவில்லை. நான் இப்போ என்ன செய்யட்டும் லோகேஷ் என்று ஆமீர் கான் கேட்டதால் இனியும் ரகிசயம் காத்து பலனில்லை என போஸ்டரை வெளியிட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Samayam Tamil