Dailyhunt
'ஆளுநர் மாளிகையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை'; காங்கிரஸ் MP ஜோதிமணி..!

'ஆளுநர் மாளிகையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை'; காங்கிரஸ் MP ஜோதிமணி..!

'மாண்புமிகு ஆளுநர் அவர்கள் தவெக தலைவர் திரு.விஜய் அவர்களை உடனடியாக ஆட்சியமைக்க அழைக்க வேண்டும்' என கரூர் காங்கிரஸ் எம்.பி.

ஜோதிமணி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது;

''ஆளுநர் மாளிகையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய இடம் சட்டமன்றம் மட்டுமே. இதுகுறித்து உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் தெளிவாக உள்ளன. தனிப்பெரும் கட்சியான தவெக தலைவர் திரு.விஜய் அவர்களை மக்கள் முதலமைச்சர் என்று முடிவுசெய்திருக்கிறார்கள்.

மக்கள் தீர்ப்பிற்கு குறுக்கே ஆளுநர் நிற்பது சரியல்ல. மாண்புமிகு ஆளுநர் அவர்களுக்கு இந்த அளவிற்கு அரசியலும், அரசியல் சாசன விதிகளும் தெரியும் என்று நம்புகிறேன். பாஜக ஆளுநர் மாளிகை வழியாக அரசியல் செய்வதை உடனே நிறுத்தவேண்டும். மாண்புமிகு ஆளுநர் அவர்கள் தவெக தலைவர் திரு.விஜய் அவர்களை உடனடியாக ஆட்சியமைக்க அழைக்க வேண்டும்'' என குறிப்பிட்டுள்ளார்.

Seithi Punal
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Seithipunal