Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
மீண்டும் மீண்டுமா...யஷ் நடித்த 'டாக்ஸிக்' ரிலீஸ் மீண்டும் தள்ளிவைப்பு! - காரணம் என்ன?

மீண்டும் மீண்டுமா...யஷ் நடித்த 'டாக்ஸிக்' ரிலீஸ் மீண்டும் தள்ளிவைப்பு! - காரணம் என்ன?

ன்னட நடிகர் யஷ் நடிப்பில் உருவாகி வரும் மிகப்பெரிய பட்ஜெட் திரைப்படமான 'டாக்ஸிக்' மீண்டும் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஜூன் 4ஆம் தேதி வெளியாகும் என முன்பே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தயாரிப்புக் குழுவும் யஷும் இணைந்து புதிய தகவலை வெளியிட்டுள்ளனர்.

'Toxic: A Fairy Tale for Grown-Ups' என்ற தலைப்பில் உருவாகும் இந்தப் படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆரம்பத்தில் மார்ச் 19ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டிருந்த இப்படம், தயாரிப்பு மற்றும் விநியோக காரணங்களால் முதன்முறையாக தள்ளிவைக்கப்பட்டது. பின்னர் ஜூன் 4ஆம் தேதி புதிய வெளியீட்டு தேதியாக அறிவிக்கப்பட்டது.

ஆனால் தற்போது, அந்த தேதியிலும் படம் வெளியாகாது என்று அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் யஷ் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், படம் முழுமையாக தயாராகிவிட்டதாகவும், ஆனால் உலகளாவிய வெளியீட்டிற்கான சரியான தேதியைத் தேர்வு செய்ய கூடுதல் அவகாசம் தேவைப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் நடைபெற்ற CinemaCon நிகழ்ச்சியில் படத்துக்கு கிடைத்த வரவேற்பு, இதை சர்வதேச அளவில் பெரிய அளவில் வெளியிட வேண்டும் என்ற நம்பிக்கையை அதிகரித்துள்ளதாக தயாரிப்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

யஷ் தனது சமூக வலைதள பதிவில்,"சில படங்களை நாம் உருவாக்குகிறோம்; சில படங்கள் நமக்கு சினிமாவை ஏன் காதலித்தோம் என்பதை நினைவூட்டுகின்றன. 'டாக்ஸிக்' அப்படிப்பட்ட ஒரு அனுபவம்"
என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், உலகளாவிய விநியோக ஒப்பந்தங்கள் இறுதி கட்டத்தில் இருப்பதாகவும், புதிய ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் படக்குழு தெரிவித்துள்ளது.

'டாக்ஸிக்' படத்தை தேசிய விருது பெற்ற இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கியுள்ளார். இது ஒரு பீரியட் ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக உருவாகி வருகிறது.

படத்தில் யஷ் இரட்டை வேடங்களில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவருடன் நயன்தாரா, கியாரா அத்வானி, ஹூமா குரேஷி, தாரா சுதாரியா, ருக்மிணி வசந்த், அக்ஷய் ஓபராய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

சுமார் ₹800 கோடி செலவில் உருவாகும் இந்த திரைப்படம் இந்திய சினிமாவின் மிகப்பெரிய பட்ஜெட் படங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

புதிய வெளியீட்டு தேதி எப்போது அறிவிக்கப்படும் என்பது ரசிகர்களின் அடுத்த பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.

Seithi Punal
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Seithipunal