இந்தியாவையே உலுக்கிய சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் (Sathankulam Custodial Death) குற்றவாளிகளான காவலர்கள் 9 பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அரிதினும் அரிதான இந்த வழக்கில் எதிர்காலத்தில் இதுபோன்ற குற்றங்கள் நிகழாத வகையில் இந்த தீர்ப்பு இருக்க வேண்டும் என்ற நோக்கில் மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த தந்தை மகனான ஜெயராஜ், பென்னிக்ஸ் கடந்த 2020ம் ஆண்டு காவல்நிலைய விசாரணையின் போது மரணமடைந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. செல்போன் கடை நடத்தி வந்த இவர்கள் கொரோனா ஊரடங்கு அமலில் இருந்த போது கடையை மூடவில்லை என்று போலீசாரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
9 காவலர்கள் கைது
அப்போது இவர்கள் இருவரையும் காவல்நிலையத்தில் வைத்து போலீசார் கடுமையாக தாக்கிய நிலையில், படுகாயமடைந்து இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக கூறி அன்றைய காவல் ஆய்வாளர்கள் ஸ்ரீதர், பாலகிருஷ்ணன், ரகு, கணேஷ் உட்பட 9 போலீசார் கைது செய்யப்பட்டனர்.
: சீமான் முதல் வித்யாராணி வீரப்பன் வரை.. நாதக வேட்பாளர்கள் யாரிடம் எவ்வளவு சொத்து இருக்கு தெரியுமா? முழு பட்டியல்
இந்த வழக்கை சிபிஐ விசாரித்து 2000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இந்த வழக்கின் விசாரணையை மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றம் விசாரித்து வந்த நிலையில், இதன் தீர்ப்பு கடந்த மாதம் வெளியானது. உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரும் போலீசார் தாக்குதலில் தான் உயிரிழந்தனர் என்பது ஊர்ஜிதம் ஆகியுள்ளது எனவும், வழக்கில் கைதான 9 போலீசாரும் குற்றவாளிகள் என நீதிபதி முத்துக்குமரன் தீர்ப்பு வழங்கினார்.
குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் நீதிமன்றம் தெரிவித்திருந்தது. குற்றவாளிகள் 9 பேருக்கும் அதிகபட்ச தண்டனையான மரண தண்டனை வழங்க வேண்டும் என சிபிஐ பரிந்துரைத்தது. இதன் தொடர்ச்சியாக இன்றைய தினம் நீதிபதி முத்துக்குமரன் தண்டனை விவரத்தை வாசித்தார்.
தண்டனை அறிவித்த நீதிபதி
அதன் விவரம் பின்வருமாறு, "கைது செய்யப்பட்ட போலீசாரில் யார் அதிகமாக அடித்தார்கள் என வேறுபாடு காட்ட இயலாது. இருவர் மீதும் எந்த குற்ற பின்னணியும் இல்லை என்பதும் தெரிய வருகிறது. மரண தண்டனை விதிப்பதை தவிர வேறு வழியே இல்லை என நீதிமன்றம் கருதுகிறது.
வழக்கு விவரங்களை வாசிக்கும்போது மனம் பதைபதைக்கிறது. இது போன்ற வழக்குகளில் ஆயுள் தண்டனை வழங்கினால், காவல்துறையினருக்கு அச்சத்தை ஏற்படுத்தாது.
: கயல் சீரியல் நடிகை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை... அதிர்ச்சியில் சின்னத்திரை உலகம்!
தந்தை முன் மகனையும், மகன் முன் தந்தையையும் நிர்வாணப்படுத்தி மனம் போன போக்கில் தாக்கியுள்ளனர். ஒரே நேரத்தில் தந்தை, மகன் என ஒரு குடும்பத்தின் ஆணிவேர் பிடுங்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இது போல குற்றம் நிகழா வகையில் தீர்ப்பிருக்க வேண்டுமென நீதிமன்றம் நினைக்கிறது.
லாக்அப் மரணங்களில் நேரடி சாட்சிகள் இருக்காது, ஆனால் சாத்தான்குளம் வழக்கில் CCTV ஆதாரங்கள் உள்ளது. எனவே, மரண தண்டனை வழங்கப்படுகிறது. பொருளாதார ரீதியான தண்டனையும் வழங்கப்பட வேண்டும் என்பதால், குற்றவாளிகள் 9 பேருக்கும் விதிக்கப்பட்ட மொத்த அபராதத் தொகையாக ரூ.1.04 கோடியை பென்னிக்ஸின் தாயாரிடம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது."

