இயக்குநர் நெல்சன் திலீப்குமார் (Nelson Dilipkumar) தமிழில் நயன்தாராவின் (Nayanthara) கோலமாவு கோகிலா (Co Co) என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலமாக இயக்குநராக அறிமுகமானார்.
அல்லு அர்ஜுனுக்கு நெல்சன் கதை சொன்னது குறித்து இயக்குநர் கோதண்டராமி ரெட்டி பேச்சு :
சமீபத்தில் நேர்காணலில் பேசிய இயக்குனர் கோதண்டராமி ரெட்டி, "ஜெயிலர் பட இயக்குநர் நெல்சன், அல்லு அர்ஜுனுக்கு கதை சொல்லியிருந்தார். அந்த கதை குறித்து அல்லு அர்ஜுன் என்ன நினைத்தார் என தெரியவில்லை என்று அந்த நேர்காணலில் அவர் தெரிவித்திருந்தார்.இயக்குநர் கோதண்டராமி ரெட்டி பேசிய வைரல் வீடியோ பதிவு:
நெல்சன் திலீப்குமாரின் புது படம் :
ஜெயிலர் 2 படத்தை தொடர்ந்து இயக்குநர் நெல்சன் தெலுங்கு சினிமாவில் படத்தை இயக்கவுள்ளார். ஏற்கனவே இவரின் தோழர்களும் இயக்குநர்களுமான அட்லீ மற்றும் லோகேஷ் கனகராஜ் நடிகர் அல்லு அர்ஜுனை வைத்து படத்தை இயக்கவுள்ள நிலையில், இவரும் இயக்கபோவதாக தகவல்கள் வெளியாகிவந்தது. தற்போது இவரின் கதையில் அல்லு அர்ஜுன் நடிக்க மறுத்ததாக கூறப்படும் நிலையில், அந்த கதையை ஜூனியர் என்.டி.ஆருக்கு நெல்சன் திலீப்குமார் கூறியுள்ளார். ஷாருக்கானிடமிருந்து அதை எப்போதும் கவனித்திருக்கிறேன் - தளபதி விஜய்! அந்த கதையானது ஜூனியர் என்.டி.ஆருக்கு பிடித்திருந்த நிலையில், NTRNEEL படத்திற்கு பின் நெல்சன் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் இணையும் படம் உருவாகும் என கூறப்படுகிறது. இப்படத்தை சூர்யா46 படத்தை தயாரிக்கும் சித்தாரா என்டேர்டைமென்ட் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்த அறிவிப்புகளும் விரைவில் வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.
