தமிழ் சினிமாவில் பிரதீப் ரங்கநாதனுக்கு (Pradeep Ranganathan) ஜோடியாக டிராகன் (Dragon) என்ற திரைப்படத்தில் நடித்து, கதாநாயகியாக அறிமுகமானவர் கயாடு லோஹர் (Kayadu Lohar).
மஞ்சணத்தி திரைப்படம் குறித்து நடிகை கயாடு லோஹர் பகிர்ந்த விஷயம்:
அண்ட் நேர்காணலில் தொகுப்பாளர் கயாடு லோஹரிடம், "மஞ்சணத்தி படம் குறித்து எதாவது சொல்ல முடியுமா?, படம் எப்படி இருக்கும்?" என கேட்டிருந்தார். அதற்கு பதில் கொடுத்த அவர், "தயாரிப்பு நிறுவனம் சார்பில் எதையும் இன்னும் அறிவிக்கவில்லை. இப்போதைக்கு இந்தத் படம் பற்றி என்னால் எதுவும் பேசமுடியாது. ஆனால், அந்த படத்தில் நடிப்பதற்காக நானா உற்சாகமாக இருக்கிறேன். நான் முன்பே மாரிசெல்வராஜ் சாருடன் பணியாற்ற விரும்பினேன்" என அதில் கயாடு லோஹர் தெரிவித்திருந்தார். தமிழ் திரைப்பட விநியோகஸ்தரர்களை சந்தித்த ஜன நாயகன் பட தயாரிப்பு நிறுவனம்.. என்ன நடந்தது தெரியுமா?மஞ்சணத்தி திரைப்படம் குறித்து இயக்குநர் மாரி செல்வராஜ் வெளியிட்ட எக்ஸ் பதிவு:
இந்த மஞ்சணத்தி படத்தை இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்க, அவரின் தயாரிப்பு நிறுவனமே இதை தயாரிக்கிறதாம். இதுவரை இவர் இயக்கிய படங்கள் முழுக்க ஒரு ஆணின் கதையை மையமாக எடுக்கப்பட்டது. அந்த விதத்தில் மஞ்சணத்தி படமானது பெண்களின் கதையை மையப்படுத்தி இயக்கப்படவுள்ளதாம். இப்படத்தில் மாரி செல்வராஜ் தனது தாயின் வாழ்க்கையை குறித்த கதையை காண்பிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார். விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தில் சூர்யாவுக்கு ஸ்டைலான தோற்றம் இருக்கும் - தயாரிப்பாளர் நாக வம்சி பேச்சு! இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கும் நிலையில், வரும் 2027ம் ஆண்டில் இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் ஷூட்டிங் இன்னும் ஆரம்பமாகவில்லை. இதில் கயாடு லோஹர், பிரியங்கா மோகன் மற்றும் கதிர் உள்ளிட்ட பிரபலங்களும் இணைந்து நடிக்கவுள்ளார்களாம். நிச்சயம் இப்படமும் மாரி செல்வராஜிற்கு நல்ல வரவேற்பை கொடுக்கும் படமாக இருக்கும் என கூறப்படுகிறது.

