நடிகர் ஆர்.மாதவன்(R. Madhavan) தமிழ் சினிமாவை தொடர்ந்து தற்போது பாலிவுட் சினிமாவில் நடிப்பில் ஆர்வம் காட்டிவருகிறார்.
நடிகர் ஆர். மாதவன் வெளியிட்ட எக்ஸ் பதிவு:
அல்லு அர்ஜுனுக்கு நன்றி தெரிவித்து நடிகர் ஆர். மாதவன் கூறிய விஷயம்:
அந்த பதிவில் நடிகர் ஆர். மாதவன், "நான் மிகவும் நெகிழ்ச்சியுடனும், மிகுந்த உத்வேகத்துடனும் இருக்கிறேன். எனது அன்பான சகோதரன் அல்லு அர்ஜுன், உங்களிடம் இருந்து இந்த விமர்சனங்கள் வருவது எனக்கு மிகவும் பெருமையளிக்கிறது. உங்களின் திறமைகளை கண்டு, நான் உங்களின் அனைத்து படங்களையும் மிகவும் பிரம்மிப்புடன் பார்த்திருக்கிறேன். எனவே, இந்த உணர்வு பரஸ்பரம் என்பதை அறிவது ஒரு அற்புதமான எமோஷன். இயக்குநர் வெற்றிமாறன் சொன்ன அந்த ஒரு வார்த்தைதான் நான் இந்த இடத்தில் இருக்க காரணம் - இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து ஓபன் டாக் கடவுள் உங்களை எப்போதுமே பார்த்துக்கொள்வார். மேலும், என் வாழ்க்கைப் பயணத்தின் ஒரு திருப்புமுனையான தருணத்தில், இணையத்தில் இதுவே முதல் விமர்சனமாக இருப்பது எனக்கு மிகவும் மிகவும் விசேஷமானது" என அந்த பதிவில் அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பான தகவல்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
