தமிழகத்தில் தேர்தல் தொடர்பான வழக்குகள் முடிவடையும் வரை இடைத்தேர்தல் அறிவிக்க வாய்ப்பு இல்லை என்று தலைமை தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் பதில் அளித்துள்ளது.
செப். 8 வரை இடைத்தேர்தல் அறிவிப்புக்கு தடை
எனவே, 5 தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்க தடை விதித்து உத்தரவிட்டிருந்தனர். இதில், தலைமை தேர்தல் ஆணையம், மத்திய அரசு, சட்டமன்ற செயலர், முதல்வர் விஜய் மற்றும் சி. விஜயபாஸ்கர், எம். ஆர். விஜயபாஸ்கர், இசக்கி சுப்பையா, ஜெயக்குமார் உள்ளிட்டோர் 3 வாரங்களில் பதில் அளிக்குமாறு உத்தரவிட்டிருந்தனர். இதைத் தொடர்ந்து, இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று திங்கள்கிழமை ( ஆகஸ்ட் 24) நடைபெற்றது. அப்போது, சட்டமன்ற இடைத்தேர்தல் அறிவிப்பதற்காக விதிக்கப்பட்டிருந்த தடை செப்டம்பர் 8- ஆம் தேதி வரை நீடித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். 'வெற்றி பயணம்'.. மாவட்டங்களுக்கு இடையே மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து சேவை.. முதல்வர் விஜய் அதிரடி அறிவிப்பு!!தேர்தல் வழக்கு முடியும் வரை அறிவிக்க திட்டமில்லை
இது தொடர்பாக, தேர்தல் ஆணையம் தாக்கல் செய்த பதில் மனுவில், தேர்தல் வழக்குகள் முடிவடையும் வரை தமிழகத்தில் இடைத்தேர்தல் அறிவிக்க திட்டம் இல்லை என்று தெரிவித்துள்ளது. இதனால், தமிழகத்தில் தற்போதைக்கு இடைத் தேர்தல் அறிவிப்பு இருக்காது என்றே தெரிகிறது. சட்டமன்ற தேர்தலில் முதல்வர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் வெற்றி பெற்ற நிலையில், திருச்சி கிழக்கு தொகுதியை ராஜினாமா செய்திருந்தார்.தமிழகத்தில் காலியாக உள்ள தொகுதிகள் விவகாரம்
இதே போல, அதிமுகவை சேர்ந்த மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), இசக்கி சுப்பையா ( அம்பாசமுத்திரம்), ஜெயக்குமார் ( பெருந்துறை), சத்தியபாமா (தாராபுரம்), சி. விஜயபாஸ்கர் (விராலிமலை), எம். ஆர். விஜயபாஸ்கர் (கரூர்) ஆகியோர் அடுத்தடுத்து தங்களது எம்எல்ஏ பதவிகளை ராஜினாமா செய்து தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தனர். இவர்களது வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள் நிலுவையில் இருக்கும் நிலையில், இடைத்தேர்தல் அறிவிக்க கூடாது என்று தொடர்ந்து வழக்கில் தான் தற்போது தேர்தல் ஆணையம் பதில் அளித்துள்ளது. ஆண்டுக்கு 3 விலையில்லா சிலிண்டர்.. முதல்வர் விஜய் அறிவிப்பு
