வராக ஜெயந்தி 2026 ஏப்ரல் 7ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. திருமாலின் மூன்றாவது அவதாரம் வராக அவதாரம் ஆகும்.
வராக ஜெயந்தி
செவ்வாய்க்கிழமை இன்று 07 ஏப்ரல் 2026 வராக ஜெயந்தி ஆன்மீக முக்கியத்துவத்துடன் கொண்டாடப்படுகிறது. இந்த நாள், திருமால் எடுத்த முக்கியமான அவதாரங்களில் ஒன்றான வராக அவதாரத்தை நினைவுகூரும் தினமாக கருதப்படுகிறது. உலகத்தை பாதுகாக்கும் கடவுளாக கருதப்படும் மகாவிஷ்ணு, தர்மத்தை நிலைநிறுத்தவும் உயிர்களை காப்பாற்றவும் பல அவதாரங்களை எடுத்துள்ளார். அவற்றில் மூன்றாவது அவதாரம் வராக அவதாரம் ஆகும். இந்த அவதாரம் ஒரு சாதாரண கதை அல்ல; அது தீமைக்கு எதிராக நன்மை வெல்வதற்கான அடையாளமாக பார்க்கப்படுகிறது.இரண்யாட்சன் மற்றும் பூமியின் மறைவு
புராணங்களின் படி, இரண்யாட்சன் என்ற அசுரன் மிகுந்த அகந்தையுடன் உலகத்தை அழிக்க முயன்றான். தனது சக்தியை நிரூபிக்க, பூமியை பாயாகச் சுருட்டி கடலுக்குள் ஒளித்து வைத்தான் என்று கூறப்படுகிறது. இதனால் உலகம் முழுவதும் இருள் சூழ்ந்தது. உயிர்கள் வாழ முடியாத நிலை ஏற்பட்டது. தேவர்கள் மற்றும் முனிவர்கள் இந்த நிலையை கண்டு மிகுந்த துயரத்தில் ஆழ்ந்தனர். அவர்கள் உலக நலனுக்காக ஒரு தீர்வு தேடி மகாவிஷ்ணுவிடம் சரணடைந்தனர்.மகாவிஷ்ணுவின் வராக அவதாரம்
தேவர்களின் வேண்டுகோளை ஏற்று, மகாவிஷ்ணு ஒரு பெரிய காட்டு பன்றியின் (வராகம்) வடிவில் அவதரித்தார். இந்த அவதாரம் சக்தி, துணிவு மற்றும் அருள் ஆகியவற்றின் இணைப்பாக கருதப்படுகிறது. கடலுக்குள் சென்று, இரண்யாட்சனை எதிர்த்து போரிட்டு அவனை வென்றார். பின்னர் தனது வலிமையான கொம்பின் மூலம் பூமியை உயர்த்தி மீண்டும் அதன் இயல்பான நிலைக்கு கொண்டு வந்தார். இந்த செயல் உலகத்தை மீண்டும் உயிர்ப்பித்தது.ஆன்மீக அர்த்தம் மற்றும் நம்பிக்கைகள்
வராக அவதாரம், வாழ்க்கையில் எத்தனை சிரமங்கள் வந்தாலும் கடவுள் காப்பார் என்ற நம்பிக்கையை வலுப்படுத்துகிறது. இந்த அவதாரம், அஹங்காரத்தின் அழிவையும் தர்மத்தின் வெற்றியையும் எடுத்துக்காட்டுகிறது. ஆழ்வார்கள் பலரும் இந்த அவதாரத்தைப் புகழ்ந்து பாடியுள்ளனர். வராகப் பெருமாளை வழிபடும் பக்தர்கள் நீண்ட ஆயுள், நல்ல ஆரோக்கியம், செல்வ வளம் மற்றும் மன அமைதி பெறுவார்கள் என்று நம்பப்படுகிறது. : வராஹ ஜெயந்தி.. பூமாதேவியை மீட்ட மகாவிஷ்ணுவின் கதையும்.. வழிபாட்டு முறையும்..வராக ஜெயந்தி வழிபாட்டு முறைகள்
சித்திரை மாத தேய்பிறை பஞ்சமி நாளில் வராக ஜெயந்தி அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளில் பக்தர்கள் விரதம் இருந்து, விஷ்ணு கோயில்களுக்கு சென்று சிறப்பு பூஜைகள் செய்வது வழக்கம். சிலர் வீட்டிலேயே விஷ்ணு புகைப்படம் அல்லது சிலைக்கு அபிஷேகம் செய்து, தீபம் ஏற்றி வழிபடுகின்றனர். "ஓம் நமோ நாராயணாய" போன்ற மந்திரங்களை ஜபிப்பதும் வழக்கமாக உள்ளது. இந்த வழிபாடு குடும்ப நலன், ஆரோக்கியம் மற்றும் வளம் கிடைக்க உதவும் என்று நம்பப்படுகிறது.
