Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
ஜேர்மனி உருவாக்கிவரும் புதிய ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு- அமெரிக்காவின் Patriot-க்கு மாற்று

ஜேர்மனி உருவாக்கிவரும் புதிய ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு- அமெரிக்காவின் Patriot-க்கு மாற்று

Lankasri News 2 weeks ago

ஜேர்மனி, தனது பாதுகாப்புத் துறையில் முக்கியமான முன்னேற்றமாக, நீண்ட தூர ஏவுகணை தடுப்பு அமைப்பை உருவாக்கி வருகிறது.

இதன் மூலம், அமெரிக்காவின் 'Patriot' ஏவுகணை பாதுகாப்பு அமைப்பின் மீது ஐரோப்பா சார்ந்திருப்பதை குறைக்க திட்டமிட்டுள்ளது.


போர் மீண்டும் வெடிக்கலாம்., அதற்கு தயாராக இருக்கிறோம்- ஈரான்

'Diehl Defence' நிறுவனம் உருவாக்கும் IRIS-T SLX எனப்படும் இந்த புதிய ஏவுகணை அமைப்பு, 40 கிலோமீட்டர் தூரம் வரை எதிரி ஏவுகணைகளைத் தடுக்கக்கூடிய திறன் கொண்டது. மேலும், 20 கிலோமீட்டர் உயரம் வரை வரும் தாக்குதல்களையும் தடுக்க முடியும்.

இந்த அமைப்பில் ரேடார், கட்டுப்பாட்டு மையம் மற்றும் வாகனங்களில் பொருத்தக்கூடிய ஏவுகணை ஏவுதளங்கள் அடங்கும்.

ஐரோப்பா, இதுவரை அமெரிக்காவின் 'Patriot' அமைப்பின் மீது அதிகமாக நம்பிக்கை வைத்திருந்தது. ஆனால், உக்ரைன் போரின் போது 'Patriot' ஏவுகணைகள் பற்றாக்குறை ஏற்பட்டதால், பாதுகாப்பில் பெரிய இடைவெளி ஏற்பட்டது.

இதனால், ஐரோப்பா தனது சொந்த பாதுகாப்பு தொழில்நுட்பத்தை வலுப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

ஐரோப்பிய நாடுகள், குறிப்பாக ஸ்விட்சர்லாந்து, ஸ்வீடன், டென்மார்க் ஆகியவை ஏற்கனவே IRIS-T அமைப்புகளைப் பயன்படுத்தி வருகின்றன. உக்ரைனும் 20 IRIS-T SLM அமைப்புகளை பெற்றுள்ளது. மேலும், வளைகுடா நாடுகளும் இந்த அமைப்பில் ஆர்வம் காட்டுகின்றன.


கமேனியின் இறுதிச்சடங்கில் இந்தியாவின் பங்கேற்புக்கு ஈரான் நன்றி

'Patriot' அமைப்பு அதிக தூரம் வரை தாக்குதல்களைத் தடுக்கக்கூடியது என்றாலும், அவை கிடைப்பதில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் காரணமாக, ஜேர்மனியின் புதிய IRIS-T SLX அமைப்பு, ஐரோப்பாவிற்கு தற்சார்பு பாதுகாப்பு திறனை வழங்கும்.

இதன் மூலம், ஐரோப்பா தனது பாதுகாப்புத் துறையில் அமெரிக்காவை சார்ந்திருக்கும் நிலையை குறைத்து, எதிர்காலத்தில் சுயமாக பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளும் திறனை பெறுகிறது.


50 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்ட தங்க நீர்மூழ்கிக் கப்பல்

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Lankasri News