கனேடிய அரசு, இந்தோனேஷியா மற்றும் மலேசியாவின் சில குடிமக்களுக்கு விசா இல்லாமல் பயணம் செய்யும் புதிய சலுகையை அறிவித்துள்ளது.
இந்த மாற்றம் மே 26, 2026 காலை 5:30 மணி முதல் அமுலுக்கு வந்தது.
eTA விண்ணப்பம் ஓன்லைனில் செய்யப்பட வேண்டும். பெரும்பாலான விண்ணப்பங்கள் சில நிமிடங்களில் அங்கீகரிக்கப்படும். கட்டணம் வெறும் 7 கனேடிய டொலர் மட்டுமே. eTA ஐந்து ஆண்டுகள் அல்லது பாஸ்போர்ட் காலாவதியாகும் வரை செல்லுபடியாகும்.
இதற்கு தகுதி பெற, விண்ணப்பதாரர்கள் கடந்த 10 ஆண்டுகளில் கனடா TRV பெற்றிருக்க வேண்டும் அல்லது தற்போது செல்லுபடியாகும் அமெரிக்காவின் non-immigrant visa வைத்திருக்க வேண்டும். ஆனால், நிலம், கடல், ரயில் வழியாக பயணம் செய்யும் அனைவருக்கும் விசா அவசியம்.
ரஷ்யாவின் கிரிப்டோ நெட்வொர்க்குகளை குறிவைத்துள்ள பிரித்தானியா
இந்த மாற்றம் கனடாவின் Indo-Pacific Strategy-யின் ஒரு பகுதியாகும். இது வணிகம், முதலீடு மற்றும் மக்களுக்கு இடையிலான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
2025-ஆம் ஆண்டில், கனடா 18,300 இந்தோனேஷிய மற்றும் 11,500 மலேசிய பயணிகளை வரவேற்றுள்ளது.
இந்த புதிய சலுகை, பயணிகளுக்கு விரைவான, மலிவான மற்றும் எளிய அனுமதி முறையை வழங்கும். ஆனால், எல்லையில் பாதுகாப்பு சோதனை தொடரும்.
உக்ரைன் தலைநகரில் தொடர் தாக்குதல்., வெளிநாட்டவர்கள் வெளியேற ரஷ்யா எச்சரிக்கை

