Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
திமுகவின் ஸ்லீப்பர் செல் தான் ஆதவ் அர்ஜுனா : ஜோஸ் சார்லஸ் மார்ட்டின்

திமுகவின் ஸ்லீப்பர் செல் தான் ஆதவ் அர்ஜுனா : ஜோஸ் சார்லஸ் மார்ட்டின்

Samayam Tamil 2 months ago

மிழக வெற்றிக்கழகம் கட்சியை சேர்ந்த ஆதவ் அர்ஜுனா தான் கடந்த சில தினங்களாக பரபரப்பாக பேசப்படும் அரசியல் பிரபலமாக இருக்கின்றார்.

சமீபத்தில் நடந்த தவெகவின் கூட்டத்தில் ஆதவ் அர்ஜுனா வழக்கம் போல திமுக அரசு குறித்து தன் விமர்சனங்களை கூறி வந்தார். அதோடு மட்டுமல்லாமல் ரஜினி கட்சி துவங்காமல் இருப்பதற்கும் அவர் அரசியலில் நுழையாமல் இருப்பதற்கும் திமுக தான் காரணம் என கூறினார்.

திமுக மிரட்டியதால் தான் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவில்லை. எம்.ஜி.ஆர் அவர்களுக்கு பிறகு அரசியல் தலைவராக வேண்டும் என ரஜினி நினைத்தார். ஆனால் அவரை திமுக மிரட்டி வைத்தனர். அதனால் தான் அவர் அரசியலுக்கு வரவில்லை என கூறியது மிகப்பெரிய சர்ச்சையை எழுப்பியது. ஒருபக்கம் ரஜினி ரசிகர்கள் கடுப்பானார்கள். மறுபக்கம் திமுகவினர் கடும் கோபத்திற்கு ஆளானார்கள்.

ஆதவ் அர்ஜுனாவை ரஜினி ரசிகர்களும் திமுகவினரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். மேலும் இதைப்பற்றி திமுக கட்சியை சேர்ந்த சிலரும் தங்களின் கருத்துக்களை கூறி வருகின்றனர். ஆதவ் அர்ஜுனாவிற்கு கண்டனங்களும் குவிந்து வருகின்றன. இந்த சமயத்தில் தான் அவரின் மைத்துனர் ஆதவ் அர்ஜுனா திமுகவின் ஸ்லீப்பர் செல் என கூறியிருக்கின்றார். ஆதவ் அர்ஜுனாவின் மைத்துனரும் லட்சிய ஜனநாயக கட்சியின் தலைவருமான ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் இந்த கருத்தினை முன் வைத்திருக்கின்றார்.

அதாவது திமுகவின் ஸ்லீப்பர் செல்லான ஆதவ் அர்ஜுனா விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் கட்சிக்குள் நுழைந்திருக்கிறார். விஜய்யையும் அவரது கட்சி தவெகவையும் அழிக்கவே ஆதவ் அர்ஜுனா அக்கட்சிக்குள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். தமிழக வெற்றிக்கழகம் கட்சி மற்ற கட்சிகளுடன் கூட்டணி வைப்பதை தடுத்து நிறுத்த பார்க்கின்றார் ஆதவ் அர்ஜுனா. அதுதான் அவரின் நோக்கமாகவும் உள்ளது என கடுமையாக விமர்சித்து பேசியிருக்கிறார் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின்.

இவருக்கும் ஆதவ் அர்ஜுனாவிற்கும் கருத்து வேறுபாடு இருப்பதாக சொல்லப்படுகின்றது. இதனைத்தொடர்ந்து தற்போது ஆதவ் அர்ஜுனாவிற்கு எதிராக தன் கருத்தினை முன் வைத்துள்ளார் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின். இவரின் இந்த கருத்துக்கள் சலசலப்பை ஏற்படுத்தி வருகின்றது. இதெல்லாம் ஒருபக்கம் இருக்க மறுபக்கம் ஆதவ் அர்ஜுனா மீது அடுக்கடுக்கான விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. ஓரிரு நாட்களுக்கு முன்பு திமுக அரசிற்கு எதிராக தவெகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தவெக தலைவர் விஜய் கலந்துகொள்ளவில்லை என்ற விமர்சனங்கள் ஒருபக்கம் இருந்து வந்த நிலையில் ஆதவ் அர்ஜுனா பேசியது மிகப்பெரிய சர்ச்சையாகி இருக்கின்றது. தற்சமயம் தவெக கட்சி எந்த ஒரு கூட்டணியும் சேர்க்காமல் இருக்கின்றனர். இந்த நிலையில் ஆதவ் அர்ஜுனாவின் பேச்சு அக்கட்சிக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தும் என சிலரால் சொல்லப்படுகின்றது.

தற்போது ஆதவ் அர்ஜுனாவின் பேச்சால் ரஜினி ரசிகர்களின் வாக்கு கண்டிப்பாக தவெகவிற்கு கிடைக்காது என்றும் சிலர் சொல்கின்றனர். இதுகுறித்து திமுக அமைச்சர் ரகுபதி, முத்துசாமி ஆகியோர் தங்களது கருத்தை தெரிவித்தனர். ரஜினி யாருக்கும் அடிபணியக்கூடிய ஆள் இல்லை, அவர் எங்களது நண்பர் என்றார் அமைச்சர் ரகுபதி. அதைப்போல ரஜினிக்கும் எங்களுக்கும் ஒரு நல்ல பந்தம் உள்ளது.

இதெல்லாம் வெறும் பொய் என்றார் முத்துசாமி. மேலும் விசிக தலைவர் திருமாவளவன், இதெல்லாம் ஆதவ் அர்ஜுனாவின் கற்பனை. இப்படியான ஒரு தகவல் முழுக்க முழுக்க கற்பனையே ஆகும் என்றார். இவ்வாறு திமுகவினரும் அதன் தோழமை காட்சிகளிலும் ஆதவ் அர்ஜுனாவின் பேச்சிற்கு பதிலளித்து வருகின்றனர்.



மறுபக்கம் ரஜினி ரசிகர்கள் மதுரையில் ஆதவ் அர்ஜுனாவிற்கு கண்டனம் தெரிவித்து போஸ்டர் அடித்து வருகின்றனர். இவ்வாறு அவர் பேசிய சில விஷயங்கள் சர்ச்சையான நிலையில் அவரின் மைத்துனர் திமுகவின் ஸ்லீப்பர் செல் தான் ஆதவ் அர்ஜுனா என கூறியிருக்கின்றார். இது குறித்து கண்டிப்பாக ஆதவ் அர்ஜுனா பதில் கருத்து தெரிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Samayam Tamil